Thursday, May 21, 2009

தமிழா...

ஈழம்-வெல்லும் நாள்
தூரம் செல்லலாம் ..
சோழன் கொடி பறக்க
வேலை தள்ளலாம்...

மரணம்தனைக் கண்டு
மனமும் கலங்கலாம்
சூது- இருள் கவிழ்த்து
இரங்கல் பாடலாம்...

ஆனால்,
இரவினைக் கிழித்து
வான்தனை எரித்து
மறைந்த ஆதவன்
உதயம் ஆவான்...

செத்து மடிந்தவன்
வித்தாய் மாறி- நம்
இரத்தம் சதையில்
சித்தம் மீள்வான்..

புயல் போல் மீண்டும்
யுத்தம் தொடங்கும்
தமிழா! என்றவன்
குரல் வான் ஒலிக்கும்...

அந்நொடி வரை நீ
பொறுத்திரு அனலாய்
உன்நொடியும் வரும்
துடித்திரு தமிழா...!

3 comments:

Sugirtha said...

நல்லா எழுதி இருக்கீங்க. நிறைய எழுதுங்கள் Li.

Karthik said...

என்ன பாஸ்? போன வருஷம்தான் போரை நிறுத்துன்னு கத்திட்டு இருந்தீங்க. இப்ப போர் வரும்ங்கறீங்க? சரியான காமெடி!

Li. said...

@ கார்த்திக்
"அது போன வருஷம்... இது இந்த வருஷம்" அப்படின்னு காமெடி பண்ண மாட்டேன், ஆனா
நண்பர் பதிவு இட்ட தேதியை பார்க்க வேண்டும். இது போன வருஷம் இட்ட பதிவு.. :-)