Monday, December 14, 2009

என் கிராமம்..

அதிகாலை ரயிலின் அரைநிமிட
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..

கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..

ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..

பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..

ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...