Friday, December 10, 2010

Secret Paths...

Sorry for neglecting you all. I know it's been long. I do not have an excuse..as always.

Went through Zuzu's latest post about our FM days, and songs associated with memories..how each song distinctly brings up a particular memory associated with that song.

I and Zuzu share a very very special bond. A bond better than brotherhood, deeper than friendship. A bond which merges the both into one. I remember the days we used to listen to 'Morpheus'. And a quacky Indianized english speaking character who used to feature in the show now n then. I remember the episode when morpheus ran an hour from his tour in South America or somewhere. :-)

And ofcourse the golden shows from AIR "Vannak Kalanjiyam". The man who hosted the show had a very peculiar tamil name, which fails me now... but his voice and the parts of the show r so fresh in memory.

Thinking about this takes me further into the secret paths in my memory. Letting me rediscover the treasure hunt moments from our elementary and middle school childhoods. I remember us peeing on the 'Manathakkali' plant at our back yard every day just for the pure evil pleasure it gave us, knowing we were doing something we could get punished for.. and us drinking directly from the garden tap, cos the water tasted so much better than it did after it was boiled and filtered..

I remember the shacks we would create in the garden, under the trees, above the trees, behind the bushes, which were hideouts of our villains or vengeful vigilantes... remember the rainy afternoons where four of us would get under a blanket and our sisters(esp. malar) would tell us horrid tales of ghosts and secret caves connecting the schools and churches, where kids who disobeyed their sisters would be taken and chained...


Further, the memory travels down to the Grip ball, GI-Joe toys, He-Man strategies that were planned and the mountains and lakes, seas, villages, valleys, rivers that were created from ordinary bedsheets, bowls, pipes, towels, show horns, bottles, hair clips and stuff...

..to Teenage Mutant Ninja turtles(Raphael and Donatello) , Swat Cats (T-Bone and Razor), Centurions (Max Ray and Jake Rockwell), and surprisingly how used to fight to play haji's character instead of johnny's in Johnny quest.

Captain Marvel, in which I was the big red guy and Amudhan was the Blue guy. And how in our universe He-Man had a twin brother.. :-)

And how our sister's would throw us out of the room and lock the door because their barbies have to dress change... :-)

These memory paths seem to be going endlessly, like a maze... and not just any maze, but dangerously a maze in which I would happily and willingly get lost.. It just has one problem... It seems I have to get out at some point always... if only I can fix that and find a way to stay in... if only...

P.S. Zuzu, this is my comment for your post... I was sure blogger is not going to allow such a big comment, even before I tried... that's y made it a post here... Write something in ur space.. I missed out about our Guns and Arrows... :-)





Tuesday, November 23, 2010

சென்ற வார உலகம்.

சென்ற வாரம் ஒளியின் வீர வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மங்களூரு சென்று மீண்டும் சென்னைப் பயணம். மோட்டார் சைக்கிளில்.
இரண்டு நாட்களில்.

காலையில் வங்கக் கடலில் கண்டு புறப்பட்டு, அரபிக் கடலில் அஸ்தமனம் பார்ப்பதாக சூளுரைத்து கிளம்பினோம். கிளம்பினோம்.. சென்று திரும்ப இடையில் 1711 கிலோ மீட்டர்கள்.

பயணக் கட்டுரையல்ல இது. இந்த பயணம்-இப்படி ஒரு பயணம் தேவையா? என்பது பலரின் கேள்வியை இருந்தது. பெங்களூரில் நண்பர்களை பார்த்தாயா? மங்களூரில் இந்த இடம், அந்த இடம் எல்லாம் பார்த்தாயா? என்ற கேள்விகளுக்கு, நேரமே இல்லை, முதல் நாள் காலை நான்கு மணிக்கு கெளம்பி, மறுநாள் காலை நான்கு மணிக்கு மங்களூர் அடைந்து, அங்கிருந்து மீண்டும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டு விட்டோம் என்று பதில் அளிக்கையில், ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்டது போலவும், செழிப்பான மனோ நிலை இல்லாதவரிடம் பெசுவட்து போலவும் அவர்கள் பேசியது நகைக்க வைத்தது.

உண்மை. எதற்காக உடலையும், மனதையும் இப்படி வருத்திக்கொண்டு ஒரு பயணம்? முடி பட ஆயிரம் வேலைகள் இங்கிருக்கையில், இது என்ன?
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் பிடி பட வில்லை. ஒரு அரை கூவல். அதற்கு எங்கள் பதில் - இந்த பயணம்.

புதிய மனிதர்களை சந்திக்க ஓர் வாய்ப்பு. உடலும் மனமும் எவ்வளவு தாங்கும் எனக் வளைத்துப் பார்க்கும் ஆசை. இந்த வயதில் செய்யாவிடில் பின்னெப்போது, எனும் எண்ணம்.

இந்த பயணத்தின் பலன்கள், எந்த புறநானூற்று வீரனையும் வலியும் பொறாமையும் கொள்ள செய்யும் இரு விழுப் புண்கள். பல அனுபவங்கள். சில நண்பர்கள். எச்சரிக்கை. முதிர்ச்சி.

கோபிகா திருமணம். நானும் தவுலத்தும் இனைந்து பங்கேற்கும்.. இரண்டாவது திருமணம் என்று நினைக்கிறேன். முதல்- ஹாஜிராவின் உடையது - இரண்டரை ஆண்டுகளுக்கு முன்.

செங்கல்பட்டில் கோபிகா மணமக்களை வாழ்த்திவிட்டு, அப்படியே ஒரே மூச்சாக, திருவான்மியூரில் மஞ்சுநாதன் திருமண விழாவிலும் கலந்து சாதனை படைத்தேன். :-) ஒரே வீச்சில் மங்களூரு சென்று திரும்பியதை விடவும் இது எனக்கு அதிக மகிழ்ச்சி.

காலில் கட்டு. ப்றேயானத்தின் பொது ஏற்பட்ட விழுப்புண் தானை மாறும், ஆறும் என்ற ஒரு வார காத்திருப்புக்கு பின், கடைசியாய் அப்பாவிடம் காட்டிவிட்டேன். 5 மாத்திரைகள், முழு ஓய்வு, காலில் 'crepe bandage' எனப்படும் சுளுக்கு கட்டு ஒரு வாரத்திற்கு என்று அவர் தன் 'மருத்துவ' குணத்தை காட்டி விட்டார். :-(

இதற்குத்தான் நான் மருத்துவர்களை அன்டுவதுமில்லை , அன்ட விடுவதுமில்லை .

ஆனால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். போய்க்கொண்டே இருக்கும். இன்று இரவு இப்பதிவை தொடர்கிறேன்.. அதுவரை... விடை கொடு நண்ப.

Saturday, November 06, 2010

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். ஒரு பட்டாசு கூட கொளுத்தாத சோம்பேறி தீபாவளி இன்று எனக்கு. வீட்டை விட்டு இந்நொடி வரை வெளியே கால் பதிக்க வில்லை. பதிவு எழுத வேண்டும் என்று மதியம் மழைச்சாரல் முதல், மாலை மஞ்சள் பூக்கள் வரை என்னை உந்தித் தள்ளி கடைசியில் இதோ...

என்ன செய்து கொண்டிருந்தேன் இந்த இரு வாரங்கள்... சச்சினுக்கு கல்யாணம்.. மூன்று நாள் விழாவில் இரண்டு நாட்கள் அடியேன் பிரசன்னம் . அதிகாலை ஆறு மணி முகூர்த்தம்... ஐந்து மணிக்கு எழுந்தும் ஏழு மணிக்கு முன் செல்ல முடியவில்லை. ரிஷிக்கு வேஷ்டி எடுத்து சென்றது மட்டுமில்லாமல், அதை அவன் இடுப்பில் நிற்கவும் வைக்க நான் பட்ட பாடு.... அய்யய்யோ.... (அவ்வளவு கடினமாக இல்லை.. சும்மா ஒரு காமடி-க்கு )

வழக்கம் போல் நாங்கள் இருவர் தான் கடைசி... :-) ஆனாலும் அந்த கடைசியில் நாங்க தான் heroes!!!!

late-ஆக போனதோடு, நண்பர்கள் எல்லோரும் வழக்கம் போல கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு அய்யரை பற்றி அடித்த comment-கள் இன்னுமும் 12 B touch விட்டு போகலை என்பதை தெளிவாக காட்டின.. சச்சினுக்கும் , அவன் காதலிக்கும் மனைவிக்கும் , நாங்கள் அணிந்து சென்ற மைனர் cooling glass-களை மாட்டி விட்டு, போட்டோ போஸ்... என்று மேடையிலயும் comedy தொடர்ந்தது .. இறுதியில் buffet-யில் bearer-களை கலாய்த்து, parking-இல் driver-களோடு இனிதே நிறைவு பெற்றது..

சென்ற ஞாயிறு indi blogger வலைப்பூ திரட்டி நடத்திய madras magic என்ற வலைப்பதிவுகளை மேடை நாடகங்களாக இயற்றும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.. சிவகாமி பெத்தாச்சி அரங்கம்..

பகுதிகள் நன்றாக இருந்தன, ஜூடி எனும் பெண் பதிவரின் கனவுக் காதலன், மற்றும் பெண் பார்க்கும் படலங்களை கிண்டல் செய்யும் நாடகம் மிகவும் பிடித்திருந்தது...

மற்ற இரு படைப்புகளும், பகுதிகள் பரவாயில்லை... நிறைவாயில்லை... ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரை வழிக்காத பல துணுக்குகளுக்கு, எங்கள் முன் வரிசை இளம் பெண்கள் விழுந்து விழுந்து , உருண்டு பிரண்டு சிரித்தது, ஒரு வேலை கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று கவலை கொள்ள வைத்தது நிஜம்...

பிறகு... வெங்கடாசலம் திருமணம்.. கடைசி நொடியில் நண்பன் மஞ்சுநாதன் அழைத்து நினைவூட்ட வில்லை என்றால் :-( ??? 9 மணிக்கு ஓடினேன்... ஆனாலும் ஒரு மகிழ்ச்சி.. நண்பர் திருமண விழ attendance 90 % மேல் சீராக வைத்துக் கொண்டிருக்கிறேன்... பெருமை.


வேறென்ன...

Saturday, October 23, 2010

அதிகாலைத் தேநீர் திட்டம்...

கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,

வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -

என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,

மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...

விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,

அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...

Monday, October 11, 2010

வணக்கம் மக்களே !!

Hi, hi, hi, hi, hi!
Long time. Elated to know that friends miss me here. :-) Like I said, I like it when my friends miss me. If I had to give a reason for not being here for so long, I donn have one. I donno y.

Can't say nothing was happening.... UK projects, Weddings, My brother's India trip, Body massages, Bangalore-Mysore Trip with ma bro, Adventure biking(which includes diving over, landing face down, with the bike on top of me), Injury(which hasn't healed for over a month now), Speed boating, ENDHIRAN (4 times), Trekking, New friends, Swimming, Maha's visit, now Mahe's visit, phew... so much has been happening... Probably I should blame it on less time or rather, the world famous 'no time' excuse.

anways, being back, makes me feel gud! :-)


P.S. Want to write about each of the above mentioned events.... :-) Hope I do.

Monday, July 26, 2010

I love me.

A sensible guy can be sensitive too. Really. Now, is that a crime?

Well, if u r more happy with less of me, you don need to call me up and tell me that.
I like to think my friends miss me.

Well, as they say... life is like that.

:-) take care buddy.

Thursday, July 15, 2010

?

வாம்மா துரையம்மா... இது வங்கக் கரையம்மா....

சில நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்... மதராசப்பட்டினம் படம் பார்த்தேன்... நல்ல படம். சில இடங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தன... பல இடங்களில் இயக்குனர் அந்தக் கால மக்களை சித்தரிப்பதில் உரிமை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியோடு திரையரங்கை விலகினேன்...

கொச்சின் ஹனிபா என்ற ஒரு நல்ல நடிகனின் கடைசிப் படம்.. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்...

இந்த பதிவு அந்த படத்தை பற்றியதோ, இல்லை எனக்குப் பிடித்த கொச்சின் ஹனிபா பற்றியதோ இல்லை.. அவரைப் பற்றி வேறொரு நாள் எழுத முயல்வேன்...

இந்த பதிவு, படம் முடிந்து இதோ என் அறையில் பாடல் முணுமுணுத்த படி யோசிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமையைப் பற்றி.. நம் வாழ்வின் பதிவுகள் நாளை எப்படி எங்கே இருக்கும் என்பதைப் பற்றி...

ஐம்பது வருடங்கள் கழிந்தால் ஒளி யாருடைய நினைவில் இருப்பான், யாருடைய நினைவிலும் இருப்பானா என்பதை பற்றி...

இன்றிருக்கும் என் நண்பர்கள், அன்று எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி... வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதைப் பற்றி..

எல்லோருமே பிறந்து விட்டோம்... மூச்சு, இதயம் அனிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன... பசி, தூக்கம், காமம், எந்த வித அழைப்புமின்றி அறிவிப்புமின்றி தோன்றி- அது தீர்ந்து - மறைந்து கொண்டிருக்கின்றன... அவைகளின் பக்க விளைவுகளை சமாளித்துக் கொண்டு நடமாடி...

ஒருநாள் இவை அனைத்தும் நின்றுவிடும். அவற்றின் நிழல்கள் நீடிக்கும்.. காமத்தின் நிழல் பிள்ளைகளாய். பசியின் நிழல் விட்டுச்சென்ற தொழிலாய் . அயர்வின் நிழல் செர்த்துச்சென்ற சுகமாய்.

ஆனால் நாம் ? உங்கள் தாத்தாவின் பெயர் தெரியுமா? அவர் தொழில்? அவரது தந்தையின் பெயர்? தொழில்? அவரது பூர்விகம்? தெவை இல்லை, இல்லையா? அல்லது அவசியம் இல்லை.

அவர் சமாதி மண்ணோடு மக்கி விட்டது. அவர் நினைவு மங்கி விட்டது. அவரது கடைசி நிழல்படமும் கரையான் இரைப்பையில். இனி அவர் இல்லை. உங்கள் மகனுக்கு அவர் இல்லை. உங்கள் பேரனுக்கு உங்கள் தகப்பன் இல்லை.

அவர்கள் வாழ்வின் நீளம் 3 தலைமுறை. நீங்களும் மறக்கப் படுவீர்கள். உங்கள் பதிவுகள் திறக்கப் படாமல் போகும். நம் பெயர்கள் உச்ச்சரிக்கபடுவது ஒரு நாள் முற்றும் முற்றும். உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் உங்களின் சுவடரியாமல் போவார்கள்.

ஏன்? பசி. தூக்கம். காமம். இவற்றின் எச்சங்களை மட்டும் விட்டுச் சென்றால், நம் வாழ்வின் நீளமும் இதுதான். குறைய வாய்ப்புண்டு. நிச்சயமாய்.

அறிவு, உணர்வு, பரிவு. இவற்றை விதைத்து பாருங்கள். நீளும். வாழ்ந்தோம், மறைந்தோம், கரைந்தோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மூழ்கி மூச்சு முட்டி , இறக்கப்போகிறோம், மறக்கப் போகிறார்கள் என்று அறிந்து மரணம் சேர்வதில் உடன்பாடில்லை.

நான் நினைக்கப் பட வேண்டியவன். அதை நோக்கி நடக்கப் பழக வேண்டியவன்.

Saturday, July 03, 2010

உலகம்.

--



இரவுகள் நீண்டு , விடியல்கள் தீர்ந்து , நீரெலாம் உறைந்து,
உயிரெல்லாம் ஓய்ந்து, கடவுள்கள் சாய்ந்துபோன உலகம் .

கோடியாண்டுகளில் யாருமே கேட்டிராத அமைதி.
கரிய வானம். ஜொலிக்கும் நட்சத்திரங்கள் .

இவற்றை வர்ணிக்கக் கூட எவரும் இல்லை.

கரப்பான் பூச்சிகள்கூட தீர்ந்து விட்டன.

அகழ்வுகள் கூறும் கதை கேட்கவும் யாருமில்லை.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் ,
உலகில் மானுடம் பார்த்த, கேட்ட, உணர்ந்த ஒட்டு மொத்த அறிவும் கோடிக்கணக்கான நூல்களாய், தகடுகளாய், பேழைகளாய் படிக்க எவருமற்று கிடக்கின்றன.

இனியும் என்றும் எவரும் பயனுற போவதில்லை.

பணம் , வைரம், தங்கம், காணி, கடவுள், இன்னும் மனிதன்
துரத்தியவை, துடித்தவை, படைத்தவை எல்லாம் அர்த்தமற்றவையாய் கிடக்கின்றன .

காற்று, இல்லை. அசைவு, இல்லை. காலம், இல்லை. மாற்றம், இல்லை.

விழிப்பில் அம்மாவைக் தேடி ஓடினேன்.

Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.

Sunday, June 13, 2010

அகம் பிரம்மம்.
சர்வம் சிவம்.
சுகம் மாயம்.
ஜீவிதம் கர்மம்.

Tuesday, June 01, 2010

தமிழ் வலை..

வலைக் குறிப்பு, வலையோலை, வலைப்பதிவு, வலைப்பூ என்று ஆதி சிவன்போல் ஆயிரம் நாமத்தால் அழைக்கபடுகின்ற பிளாக்கினைப் பற்றி எழுத வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக நான் கொண்ட அனுபவங்கள் தூண்டுகின்றன...

வலை நண்பர் கவிதா அவர்கள் அன்புத்தொல்லை தந்து தமிழ் மனம் போன்ற வலை பின்னல்களிலும் எனை இணையசெய்தார்... அங்க இருந்து தாங்க 'வலைப்பூவின் முட்பக்கம்! ' என்று எழுதும் அளவிற்கு தகவல்கள் .

சுஜாதா கேள்வி - பதில்களில் ஒருவர்

"பிளாக்குகள் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?" என்று கேட்க ,

" 'சாட்'களை விடவும் பொறுப்பில்லாதவை பிளாக்குகள்..."

என்பது போன்று ஒரு பதில் அளித்திருந்தார் சுஜாதா ... அதைப் படித்த பொது, சுஜாதாவிற்கும் வயசாயிடுச்சா? என்ற அளவிற்கு நான் யோசித்தேன்... ஏதாவது ஒன்றிரண்டு வலைப் பதிவுகளை படித்துவிட்டு சொல்லிருக்கார் என்று ஒரு நிமிடம் அவரை தவறாகவும் நினைத்துவிட்டேன்...

தமிழ் மனம் மற்றும் சில திரட்டிகளில் இனைந்து பிற தமிழ் 'அறிஞர்', 'எழுத்தாளர்கள்', 'மேதைகளின்' , வலைப் பூக்களை பார்த்த பின்புதான் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு ஊகித்தது சுஜாதா இல்லை என்பது உரைத்தது...

எனக்குத் தெரிந்த இனியா, யாத்ரா , போன்றோரின் வலைப்பூக்கள் நிஜப்பூக்களை விடவும் மென்மையானவை... கலகலப்ரியா போன்றோர் கொந்தளிப்பைக் கூட பொறுப்போடும், நயத்தோடும் வெளிடுபவர்கள்.. அம்பி , சைனா முதல் சைனா பஜார்காரன் வரை கிண்டல் அடித்தாலும் படிப்பவர் மனது நோகாமலேயே விஷயத்தை முடிப்பவர்... இதுவரை இவர்கள்தான் என் பிளாக் உலகமாக இருந்து வந்துள்ளனர்...

ஆனால் , திரட்டிகள் மூலமாக பெரிய பெரிய எழுத் 'தாளர்களின் ' வலைப்பூக்களையும், புரட்சிக் கருத்துகளை ஊட்டுவதாக தாங்களே தங்களை நவீன ஈ. வே .ரா க்களாக முடிசூட்டிக் கொண்டவர்களையும் அவர்களின் இடுகைகளிலும் , பிறர் கருத்திற்கு அளிக்கும் மதிப்பிலும் , மற்ற எழுத்தாளர்களை அடைமொழிக்கும் வார்த்தைகளிலும் , சுஜாதாவின் வார்த்தைகள் நியாயப்பட்டன...

தொடரும்...

பி. கு. சென்ற முறை 'தமிழும் நானும் ' பதிவு 'ரெம்ப' நீளமாக இருக்கு, கொஞ்சம் கம்மிபண்ணிக்கோங்க என்று வந்த கருத்திற்கு மதிப்பளித்து, இந்தப் பதிப்பை பகுதிகளாக இட முடிவு செய்யப்பட்டுள்ளது ...

Saturday, May 29, 2010

பொல்லாது...

--


அலைகள் போல நில்லாது
அலையும் உள்ளம் பொல்லாது...

விழியை தீண்டி நில்லாது
விலகும் துயிலும் பொல்லாது...

சொல்லச் சொல்லி சொல்லாது
ஏய்க்கும் வார்த்தை பொல்லாது...

உனைக் காணும் நொடியில் நில்லாது
தொடரும் காலம் பொல்லாது ...

உனைக் காணாக் கணத்தில் நில்லாது
ஓடும் உயிரும் பொல்லாது...

நீ இல்லா உலகம் இல்லாது
செய்த இக்காதல் பொல்லாது...





பி. கு. ஒரு பின்னிரவில், கடற்கரையில் அழுது , சிரித்து, ஐஸ் கிரீம் முதல்சிகரட் வரை பகிர்ந்து காலத்தை அந்த நொடிக்குள் தொலைத்து இருந்த காதலர்களையும், ஓயாமல் எனை அழைத்து செய்தி சொல்லிகொண்டிருந்த கடல்அலைகளையும் விட்டுப் பிரிந்து கிளம்புகையில் தோன்றிய சில வரிகள்...

Sunday, May 16, 2010

தமிழும் நானும் ...

யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்.. எப்புடி? கணக்குல 10 , சயின்ஸ்ல 20, வரலாறு, பூகோளம் எல்லாம் அரையோ, காலோ... ஆனா தமிழுல 80 -90.... எப்புடி? எங்க நெஜமாவே தமிழ் பிடிக்க ஆரம்பிச்சிது?

ராதா சித்தி .. சிறுவர் மலர்... அங்கதான் ஆரம்பிச்சிருக்கணும்... ஆமா.. அங்க தான் ஆரம்பிச்சிச்சு... கதை படிச்சு படிச்சுதான் எனக்கும் அமுதனுக்கும் சாப்பாடு ஊட்டனும்.. ராமாயணம், மகாபாரதம், புராணம், சி. ஐ . டீ.... இப்படி விதம் விதமா சொல்லணும்...

ஆனா நல்லா நியாபகம் இருக்கு, ராதா சித்திக்கு சில நேரம் கதை சொல்லிச் சொல்லி தொண்டை வறண்டிரும்... அப்பறமா சொல்லறேன் குட்டி, அத்தைக்கு முடியலை.... நீங்களே படிங்க பாப்போம்ன்னு தூங்கிடுவாங்க... அப்போ நாங்களாவே சிறுவர் மலர் எடுத்து படக்கதை பார்க்க ஆரம்பிச்சிடுவோம்... அப்பறம் மெல்ல மெல்ல சிறுகதை... தொடர்கதை....

அப்பறம்.. மன்னார்குடி.. அங்க போனா அம்மா, மாமா சின்ன வயசுல அவங்க படிச்ச படக்கதைகள்.. 'ராணிமுத்து ' ;-D ... மாயாவி, இரும்புக்கை மாயாவி, இன்னும் நெறைய...

ஜூனியர் விகடன்ல வார வாரம் எதாவது ஒரு பெண் 'போலிஸ் ஸ்டேஷன்ல கற்பழிக்கப்ப் பட்ட', அல்லது யாராச்சும் ஒரு நடிகை, அல்லது , 'அழகியோட ' அரைகுறை டிரெஸ் படம் , இதுமாதிரிதான் அட்டையில போடுவாங்க... விலாவாரியா கிளுகிளுப்பு கொறையாம எழுதவும் செஞ்சிருப்பாங்க....

அதானால அதையும் படிக்க ஆரம்பிச்சேன்... திருட்டுத்தனமா...

"போற வழி தப்பா இருந்தாலும், சேருற எடம் கோவிலா இருக்கணும் " நு ஜென்டில்மேன் படத்துல நம்பியார் சொல்ற மாதிரி, இப்படி உருப்புடாம படிச்சிருந்தாலும், அதுல தமிழ் நல்லா வந்திருச்சி...

(ஆனா இப்புடி கண்ட கண்டதை படிச்சதுனாலதான் மத்த எதுலயும் தேறலைன்னு நீங்க நேனைக்கறதும் கேக்குது, அதுக்கு அப்பறம் வருவோம்...)

அப்பறம் நான் படிக்க ஆரம்பிச்சது வைரமுத்து .... மனுஷன் அப்போலாம் என்னைய அடிச்சு தொவைச்சு அழ வெப்பாரு... இந்த டயத்துல தான் நான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் எழுதவும் ஆரம்பிச்சேன்...

இதுக்கெல்லாம் மின்னாடியே, அதாவது ரெண்டாம் வகுப்பு, மூணாம் வகுப்பில இருந்தே , தமிழ் மேல இன்னும் ஆசை வர காரணமா அமைஞ்சது - 'தமிழ் டிராமா...'

நாம என்னமோ வேல்கொம்பு புடிச்சிகிட்டு நாடகம்பூராம் ஓரமாதான் நிக்கப்போரோம்னாலும்... ஒருவரி கூட நம்பளை நம்பி குடுத்ததே இல்லனாலும்,
எல்லார் வசனத்தையும் மனப்பாடம் பண்ணி வீட்ல வந்து அம்மா முன்னாடி 15 பேரை மோனோ ஆக்டிங் செஞ்சு காட்டி அழ வெப்போம்......

பின்னாடி கொஞ்சம் முன்னேற்றம்.. நாலு காவல்காரன்ல முன்னால நாமதான்.. "ஒளி, நீ முன்னாடி நில்லு"ம்பாங்க தமிழ் அம்மா... மூஞ்சி தெரியும் போட்டோ எடுத்தா ... ஒரே பெருமை...

ஒரே ஒருதடவை தப்பி தவறி நாலு வரி வசனம் வந்துடிச்சு... ஆசை ஆசையா அம்மா கிட்ட வந்து சொல்லிட்டேன்..

கதையில பொய் சாட்சி சொல்றவன்... உடனே எங்க ஆத்தா , அப்பா எல்லாரும் பொங்கிட்டாங்க.... "பொய் சாட்சி சொல்றமாதிரி, பொய் சொல்ற மாதிரி எல்லாம் நடிக்க கூட கூடாது..." ஆச்சா ஊச்சான்னு ஒரே அட்வைசு.... கடைசில நடிக்க விட்டாங்க....

வெவரம் தெரிஞ்ச அப்பறம் நெறைய தடவ நெறைய கேள்விகள் மனசுக்குள்ள வந்திருக்கு..அவங்க கிட்ட எல்லாம் கேக்கனும்னு .... சரி ...அதை விடுங்க...

இங்கிலீஷ் நாடகம், டான்சு, எதுக்கு யார் கூப்ட்டாலும் போறது இல்ல... 'நாங்க தமிழ் டிராமா..'

அப்பறமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து ஹீரோ ஆனோம்... ஆனா பாருங்க என் கெரகம்... அடுத்த நாடகத்துல இருந்தே நடிக்க விடல வீட்ல... ("மொதல்ல படிச்சி கிழி, அப்பறம் போய் கூத்தாடு")

அப்பறம் பத்தாம் வகுப்பு லீவுல அம்மா அறிமுகம் செஞ்சு வேச்சவருதான் என்னை அடுத்த படிக்கு அழைச்சிட்டு போனாரு... அவர் பேர் சுஜாதா... கணேஷு, வசந்துன்னு ரெண்டு பேரை என் வாழ்க்கையில கொண்டு வந்தாரு.....

"பாஸ், குட்டிங்க எல்லாம் நம்ம கூடத்தான் ஜெர்மனி வருதுங்க... "
"என்னடா பாஷை இது, குட்டிங்க அது இதுன்னு..."
"அப்பறம் எப்புடி பாஸ் சொல்றது? 'கன்னிகைகள்'-ன்னு சொல்லலாமா? , ஆனா அது நமக்கு சரியா தெரியாதே பாஸ்....? கேட்டு வரட்டுமா ?"

வயிறு புன்னாயிருச்சிபா இந்த வசந்த் பையனோட... லீவு பூரா அவங்களோடதான்...

அப்பறம் புடிச்சது, கெடைச்சது, கெடைக்காதது, கற்றது, பெற்றது, கவிதை, பிளாக்குன்னு... தமிழ் என்னோட வந்துகிட்டு இருக்கு... ஆனாலும் இன்னும் சந்திப் பிழை இல்லாம எழுத தெரியாது... இலக்கணத்துல 80 பர்சண்டேஜ் மறந்திட்டேன்...

"சலசல சலசல ,ரெட்டைப் பிறவி, தகதக தகதக ரெட்டைக் கிளவி, உண்டல்லோ...தமிழில் உண்டல்லோன்னு " ஜீன்ஸ் பட பாட்டை வெச்சி திலகவதி மிஸ் ரெட்டைகிளவி எடுத்தது,

"ராமாயணத்தில் அங்கதன் ராவணனிடம் தூது போய், மலைமாதிரி இருந்த தோள்கள் குலுங்க, தன கரங்கள் இரண்டும் செவந்து போற அளவுக்கு கைய தட்டி 'நக்கினான்' அப்படிங்கறதை படிச்ச மறு நிமிஷமே, 'நக்கல்'ங்குற வார்த்தை எங்க இருந்து வந்துச்சுன்னு புரிஞ்சது நியாபகம் இருக்கு ....

நெல்லுக்கும் யானைக்கும் சேத்து பாடுன சிலேடையோட நியாபகம் இருக்கு...

"எக்கலிங்கம் போனால் என்ன, ...மதுரை சொக்கலிங்கம் உண்டே துணைன்னு" குருட்டுப் புலவர், இருந்த ஒரு டிரெஸ்ஸயும் தொலச்சப்பக் கூட நக்கலா பாடுன பாட்டு நியாபகம் இருக்கு...

இப்படி கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் இருக்கு.... புறநானூறு அறிமுகம்- சுஜாதா, வாங்கி இருக்கேன்.. பாக்கலாம்....

தமிழ் ரொம்ப பிடிக்குமுங்க.. ஆனா சூரப் புலி எல்லாம் கெடையாது... எனக்கு வெக்கமாத்தான் இருக்கு... என்ன பண்றது? தமிழ் பிடிக்குமே...

தப்பு பண்ணாம தமிழ் கத்துக்க முடியாதுங்க... அதனால வெக்கப்படாம கத்துக்கலாம்.... கேக்க மறந்துட்டேன்....உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? வாங்களேன், தப்பு தப்பா பேசி எழுதியாச்சும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம்... தப்பில்ல .... :-)

Monday, April 26, 2010

Pretty Woman....

Pretty Woman... please love me,
Pretty Woman... it's destiny,
Pretty Woman... just u n me,
Pretty Woman... we've a history,

Pretty Woman.....

Pretty Woman... it's just crazy,
Pretty Woman... it's not easy,
Pretty Woman... dun make me cry,
Pretty Woman... dun let me die,

Pretty Woman...

Pretty Woman... where is you,
Pretty Woman... I miss you,
Pretty Woman... hear my song,
Pretty Woman... don't be long,

Pretty Woman...
Lovely,
Pretty Woman..
Pretty,
Pretty Woman..

ma loving,
Pretty Woman..

am lonely,
Pretty Woman.......


Thursday, April 22, 2010

முதல் பரிசுக் கவிதை...

அதிகாலை எழுந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல், தூங்கவும் மனம் இல்லாமல் என் பழைய கவிதை நோட்டுகள் / துண்டுக் காகிதங்கள் ஆகியவற்றை பிரித்து மீண்டும் பலவருடங்களுக்கு முன்னாள் கவிதை எழுதும் ஆர்வக்கோளாரில் கொண்டு கண்டதையெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த கிறுக்கல்களை ஆராய்ந்தேன்... இப்படி அடிக்கடி செய்வது ஒரு அழகான உணர்வு ...

அதில் சில கவிதைகளை வலைப்பூவில் இடவேண்டும் என்று தோன்றிற்று .. சில அவைகளின் நயத்திற்காக, பல நகைப்புகாக.. நிறைய கவிதைகள் சில்லியாக இருக்கின்றன.. அவற்றின் கதைகளைக் கூறி, அவற்றைப் பற்றி இப்பொழுது தோன்றும் கருத்துக்களை இட்டு வலைப்பூவில் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

ஒருவேளை, வலைப்பூ என்பதே எல்லா இடத்திலும் கவிதைகள் பிரசுரம் ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு கவிஞனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது? நம் படைப்புகளை எவனும் வெளியிட வேண்டாம்.. நாமே வெளியிட்டுக்கொள்ளலாம்.. நிராகரிப்பே கிடையாது... யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

நான் முதல் முதலாக (முதலும் கடைசியுமாக) பரிசு பெற்றது இந்தக் கவிதைக்குதான்.. பதினொன்றாம் வகுப்பில், பள்ளி ஆண்டு விழா கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது.. மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள்.. ஒன்று அப்பொழுது குஜராத்தில் நிகழ்ந்திருந்த கொடிய இயற்கை பேரழிவு - பூகம்பம் பற்றியது, மற்றொன்று அமரகவி பாரதி பற்றி, மூன்றாம் தலைப்பு நினைவில் இல்லை.

பாரதியை பற்றி எழுதுவதுதான் என் முதல் எண்ணம்.. பிறகு எவ்வளவு எழுதினாலும் ஏற்கனவே எங்கோ யாரோ எழுதியது போலவே எனக்கு ஓர் உணர்வு.. மிகவும் கிளிஷே வாகவே கருத்துக்கள் தோன்றிக்கொண்டிருந்தன... மீசைவைத்தவன், முண்டாசுக் கவிஞன்.. என்றெல்லாம்... பிறகு இந்த தலைப்பை தேர்ந்து எடுத்தேன்...

கடுமையான போட்டி என்று கூற இயலாது. அனால், ஆண்டுவிழாவிற்கு தமிழ் வாத்தியாரும், சமஸ்க்ரித வாத்தியாரும் சமர்பித்த நாடகங்கள் நிராகரிக்கப்பட்டு, நான் எழுதிய நாடகம் தேர்வு செய்யப்பட்ட நேரம் அது. இருவரும் என் மீது கொஞ்சம் அதிகமாகவே துவேஷத்தில் இருந்தனர்.

தமிழாசிரியர் உயர்திரு . புகழேந்தி எனப்படுகின்ற சீனிவாசன் எனப்படுகின்ற திரு . அஸ்வின் அப்பா என்னை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கொஞ்சம் ரொம்பவே கடுப்பில் இருந்தார்; வெங்கடகிருஷ்ணனுக்கு பரிசு வாங்கித்தர வேண்டும், என்பதில் சமஸ்க்ரித ஆசான் மிகக் குறியாகி, அவரே கவிதை வரிகளையும் எழுதி தந்திருந்தார். நல்லவேளை!

அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவருமே தேர்வு செய்யும் நடுவர்களாக இல்லை, திருமதி . கர்னாம்பாள் என்றழைக்கப்பட்ட, கிருபாகாந்த் அம்மாவாகிய, எங்கள் வேதியல் ஆசிரியை வெற்றிக் கவிதையை தேர்வு செய்தார்.மறக்காமல், கவிதையின் கடைசி வரிக்காகத்தான் இந்த பரிசு என்பதையும், இந்த ஆர்வத்தை படிப்பிலும் காட்டினால் உருப்படுவேன் என்பதையும் கூறி வாழ்த்தினார்.

இன்னொரு அழகான கொயின்சிடன்ஸ் , ஆண்டுவிழா நாடகத்தில் பாரதி வேடம் ஏற்றதால், கவிதைப் போட்டியில் பரிசு பெற என் பெயரை அழைத்ததும் மேடைக்கு பாரதி வேடத்திலேயே சென்றதைக் கண்டு கூட்டம் சிரிப்பும் ஆரவாரமும் கொண்டது... என் முதல் பரிசுக் கவிதை, முதல் பரிசையே பெற்றது....

இப்பொழுது படித்து பார்க்கையில் எனக்கே ரொம்ப 'காமெடி ' யாக இருக்கிறது.. கிட்டத்திட்ட சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை... இன்று இதைப் படிக்கையில் சிரிப்புக் கவிதையாக இருக்கிறது... எனிவே... படியுங்கோள் ...


இதயத்தில் பூகம்பம்...
(தலைப்பு?...ஹ்ம்ம்.. )

பூமித்தாயே !,

உன் வாளின் கூர்மை சோதிக்க,
பூக்கள்தானா கிடைத்தன?
(ரொம்ப வைரமுத்து படித்து, கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்த காலம் அது... :-) )

உன் கனலின் வெப்பம் சோதிக்க,
பனித்துளிகள்தானா கிடைத்தன?

உன் பிள்ளைகள் மீது உனக்கே
ஏன் இந்த கோபம் ?

இரு,... இரு,...

(இது எதுக்குன்னு எனக்கும் தெரியலை..)

உன் கோபத்தின் எழுச்சியால்
ஏற்பட்ட பிளவா இது?

இல்லை, நீ குலுங்கி அழுததனால்
ஏற்பட்ட பிளவிதுவோ?
(ஐயோ... முடியலை...கவிஞர் பொங்குராராம்.)

நீ தலை தட்டி கண்டிக்க
ஆயிரம் வழிகள் இருக்கிறதே;

நீ வருத்தத்தை வெளிப்படுத்த
ஆயிரம் முறைகள் இருக்கிறதே;
(அண்ணாமலை படத்து டயலாக் தானே இது?)

அதையெல்லாம் விடுத்து
ஏன் இந்த அழிவு வழி?

உன் வருத்தத்தை வெளிப்படுத்த,
அளித்தாயோ பிரிவு வலி?

(வழி, வலி ...அடடடடா....)

போதும் தாயே !,
நிறுத்திவிடு உன் தாண்டவத்தை இனியாவது!,
உன் கோபம் எனும் முகமூடி வினையானது..

எச்சரிக்கிறேன் நிறுத்திவிடு பூமிப்பாவை,
இல்லை என் கவிதைத் தீயில் எரிந்தே போவாய்... !
(ஹ்ம்ம்.. பூமியை எரிச்சிட்டு தலைவர் வேற எங்க போவாராம்?)






பி. கு. அஸ்வின் அப்பா, கிருபாகாந்த் அம்மா, என்றெல்லாம் ஆசிரியர்களுக்குபட்டப் பெயர் வைத்திருப்பதற்கு மிக மிக சுவாரஸ்யமான காரணங்கள்இருக்கின்றன... அவை பற்றி வேறோருசமயம் வாய்ப்பு அமைகையில் கூறுகிறேன்..

Monday, April 19, 2010

முடிவுறா கவிதைகள்....1

முன் குறிப்பு:

நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.

இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.

தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.

கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.

situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.

தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.

இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...

( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )

:பல்லவி :

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?

பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?

ஆண்: (பார்வைகள் புதிதா...)

பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?


பெண்: (பார்வைகள் புதிதா...)

நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?



: சரணம் :

ஆண்: (அந்த இள வயதில்...)

சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....

பெண்: (நந்தவனக் கரையில்...)

பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...

ஆண்: (காதலர் தீண்டாத...)

பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..

பெண்: (இடைவெளி தாண்டாதே...)

கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..

ஆண்: (தொடத் தொட...)

விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

பெண் : (தொடத் தொட...)

உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...



: சரணம் ௨:

ஆண்: ( பனிதனில் குளித்த...)

மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..

பெண்: ( பசித்தவன் அமுதம்...)

ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...

ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

Tuesday, April 13, 2010

ஊட்டி விடுமுறை....

தலைப்பை பார்த்த உடனே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் முறைகள் பற்றி கூறப் போகிறான் என்று தப்பாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு எனது வணக்கங்கள்..

நிறைய நாட்கள் கழித்து எனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா செல்லக் கிட்டியது. காதல் , நட்பு, பாசம் என பலவும் கண்டு, உணர்ந்து ,அனுபவித்தேன். இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..

கேயன், அரவிந்த் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.. கேயனுடயது பத்து வருடக் காதல் என்றால் , அரவிந்தனுடயது பத்தாவது காதல் என்று சொல்லலாம்.. கணவன், மனைவி என்னும் உறவினை தாண்டி அவர்கள் தம் மனைவியருடன் நண்பர்களாக வாழ்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. மாஷா அல்லா . :-)

சரவணனின் காதல் ஒரு புறம். ஓயாமல் போனில் பேசிகொண்டே இருந்ததும், அவன் காதலி அழுவதும், புலம்புவதும் ,ஆராற்றுவதும், அதனை இவன் சாமாதம் செய்து கொஞ்சி ,கெஞ்சி அமைதிப் படுத்துவதும்... எங்களுக்கு சிரிப்பு..

நட்பு. திருமணம் ,வயது, வேலை, எல்லாவற்றையும் தாண்டி இன்னும் மாறாதிருக்கும் பள்ளித் தோழர்களின் நட்பு . எல்லோரிடமும் குறைகள் உண்டு.எங்களிடமும். ஆனால் அதை எல்லாம் மீறி அடிப்படையில் நல்லவர்கள் .
அரவிந்த் இன்னும் இரண்டாம் வகுப்பில் என்னைப் பார்த்து நுழைவுத் தேர்வெழுதி , என்னை விட இரண்டு ரேன்க் முன்னாள் வந்ததை வாஞ்சையோடு கூறிக்கொண்டு இருக்கிறான்..

கார்த்தி எனப்படும் கேயன்.. வாய் தவறி யாரும் அவனை ஒளி என்றோ, என்னை கேயா என்றோ அழைத்துவிட்டால் எங்களுக்குள் இன்னும் சிரிப்புதான்... பள்ளியில் எங்கள் இருவரில் யார் கேயன், யார் ஒளி என்றாய் பிரித்துக் காண முடியாத அளவுக்கு ஒட்டித் திரியும் ரெட்டையராய் இருந்தோம்..

அழாகான சிரிப்புகள்.. விளையாட்டில் போட்டி.. கோபம்.. எல்லாமே நன்றாக இருந்தது.. நவம்பர் மாதம் மாமா (தினேஷ் ) , நான் , பார்த்தது, ஆபத்தான, அமைதியான, பலருக்கும் காணக் கிடைக்காத ஊட்டி. இம்முறை வழக்கமான, ஆபத்தில்லாத விடுமுறை ஊட்டி.

கொஞ்சம் தீர்த்தம். கொஞ்சம் யாகம். புண்ணியம் சேர்த்துக்கொண்டேன் என் கணக்கில். ரயில் பயணம் - அழகு .

போதுமான முறை தோற்றால், தோல்வியையும் வெற்றியையும் ஒரே போன்று பார்க்கும் பக்குவும் ஏற்பபட்டுவிடும். எனக்கு ஏற்பட்டுவிட்டாயிற்று.

விரும்புபவர்களை நோகடிப்பதும், வெறுப்பவர்களை மன்னிப்பதும் சுலபமாக இருக்கிறது என்று முன்பே ஒரு முறை கூறி இருந்தேன்.. மீண்டும் மீண்டும் நிரூபணம்.

சுஜாதா நாடகங்கள் முழு தொகுப்பு புத்தகம் வாங்கி இருந்தேன்.. என் பிறந்தநாள் வாக்கில் கையில் நிறைய காசு புழங்கியபோது.. வெகு நாட்கள் கழித்து நான் படிக்கும் புத்தகம். குளியலறைப் புண்ணியம்.

வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணம். சபதம் செய்தால் நிச்சயமாக நிறைவேற்ற மாட்டேன் என்று தெரியும். அதானால் வெறும் எண்ணம். பார்க்கலாம்.

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. மீண்டும் விரைவில் எழுத வேண்டுகிறேன். நன்றி. அபத்தமாக, சட்டேன்று நடுவிலேயே முடிக்கிறேன். மன்னிக்கவும்.

Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...


Friday, February 26, 2010

Thursday, February 25, 2010

--



ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...

உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...

ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...

என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...

தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...

என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...



















குறிப்பு :
இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......

Monday, February 22, 2010

முயற்சி 1 :


விடு வில்லின்
பழிச் சொல்லின்
கொடி யல்லின்
பகை கள்ளின்
முகம் கண்டு
பயம் இல்லை.

மிகை செல்வம்
புகழ் கர்வம்
கெடு சொந்தம்
மகர் போகம்
தனைக் கண்டு
பயம் உண்டு .

விளக்கம்:

என் மீது எய்யப்படும் அம்புகளைக் கண்டும், என் மீது கூறப்படும் இழிவான சொற்களைக் கண்டும், கொடிய துன்பங்களைக் கண்டும், பகைவர்களின் கள்ளம் கண்டும்/ பகைக்கும் கள்வர்களைக் கண்டும் எனக்கு பயம் தோன்றுவது இல்லை.

ஆனால், அளவுக்கு அதிகமான செல்வம், பிறர் புகழ்ச்சிக்கு மயங்கி அதனால் உண்டாகும் கர்வம், நமக்கு தீமை நினைக்கும் உறவினர்/சுற்றத்தார், பல பெண்கள் மீதான தவறான மோகம், இவ்வாறான தீயவற்றைக் கண்டே பயம் கொள்கிறேன்.




முயற்சி 2:


பகைக் கொல்லின்
பழி சொல்லின்
துணை இல்லின்
தொடர் அல்லின்
துயர் இல்லை.

புகழ் நானின்
சிகை கூனின்
புறம் கா-நின்
அறம் வீணின்
உயிர் இல்லை.


விளக்கம்:

பகைவர்கள் என்னை கொன்றாலும், அவதூறு செய்து பழிகள் சொன்னாலும், என் பக்கம் துணையேதும் இல்லாமல் நான் தனி ஆனாலும், தொடர்ந்து அல்லல்கள், இன்னல்கள் தோன்றினாலும், எனக்கு அதனால் துயரம் ஏற்படுவது இல்லை.

ஆனால், என் புகழுக்கு ,நன் மதிப்புக்கு இழுக்கு சேர்ந்தால், நான் நாணத்தால் கூனி , பகைவர் முன் தலை வணங்கும் நிலை தோன்றினால், என் முதுகை நீங்கள் காண நேரிட்டால் (புறமுதுகிட்டு ஓடும் நிலை வந்தால்), என் அறத்தில் பிழை ஏற்பட்டு நான் தவறிழைக்க நேர்ந்தால், நான் அதன் பிறகு உயிர் வாழ மாட்டேன் , துயரத்தில் மரிப்பேன்.



குறிப்பு: இலக்கியம் எழுத வேண்டும் என்றில்லை.. இலக்கியத்தனமாக ஏதேனும் எழுதமுடியுமா என்ற முயற்சி...

Wednesday, February 17, 2010

--


என் வலைப்பூ பூத்து வெகுநாள் ஆகி விட்டது. சுஜாதா நினைவு நாள் (27/02) கட்டுரைகள் குமுதத்திலும், விகடனிலும், பூக்க ஆரம்பித்து விட்டன.. படிக்கையில் சிறிய சோகம்...

நேற்று சன் தொலைக்காட்சியில் 'முதல்வன்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அர்ஜுன் ஒருநாள்-பதவி ஏறி / இறங்கி அன்று இரவு அவர் வீட்டில் கரண்ட் , தண்ணீர் எல்லாம் நின்று விடும்.. அவரின் அம்மா குழாயை திருகியபடி "நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லை" என்று சொல்லிக்கொண்டே , "தண்ணியும் வரலையே ... மாமி, உங்க வீட்ல தண்ணி வருதா?" என கேட்க, அவருக்கு பின்னால் பக்கத்து வீட்டு மாமி செடிகளுக்கு தண்ணீர் சொரிந்து கொண்டே "வர்றதே! " என்னும் காட்சி 'direction' -இல் அடங்குமா , திரைக்கதையா, என்றெல்லாம் இனம்பிரிக்கும் முன்னமே, சுஜாதா தான் என் கண் முன்னே தோன்றினார்..
பாவம் ஷங்கர், கமல் மற்றும் பலர்..

கூகுல் குரோம் உபயோக ' படுத்தும்' லட்ச கணக்கான பொறுமைசாலிகளில் நானும் ஒருவன்... சத்தியமாய் குரோம் உபயோகத்தால்தான் பதிவுகள் போடுவது குறைந்துவிட்டது.... குரோமில் வலைப்பூ எழுத 'unicode ' தமிழ் வசதி தோன்றாது, ஆதலால் குரோமில் வேலை செய்கையில் பதியும் மனம் வந்தால் கூட, மீண்டும் 'firefox ' திறந்து, கடவு கொடுத்து, பதிந்து,......... அதற்குள் சொல்ல நினைத்த செய்தி/மனநிலை மறந்து/ மாறி விடும் ,

மேலும், கோப்புகளை பதிவிறக்காமல் வெறுமனே பார்த்து விட்டு அழித்து விடும் வசதியையும் நீக்கி விட்டிருக்கிறார்கள். - ஒன்று,கோப்புகளை என் கணினியில் பதிந்தாக வேண்டும், இல்லையெனின் குரோம் எப்படி காட்டுகிறதோ அப்படித்தான் பார்த்தாக வேண்டும்..

ஒரு நாளைக்கு பல முறை வலைதள-வடிவமைப்புகளை பார்த்து சரி செய்யும் பனி எனக்கு இருப்பதனால் கூகுளின் செல்லப் பிள்ளையால் ஒவ்வொரு மாலையும் என் 'desktop' (யாரேனும் தமிழாக்கம் தரவும்..) பரிதாபகரமான என் நிஜ மேசையை போலவே காட்சி அளிக்கிறது..

கூகுல் புதுமைகள் பல படைப்பதும், ' இலவசங்கள் ' பல அளிப்பதும் நம்மை கூகுல் மேல் தீராத காதல் கொள்ளச் செய்திருக்கிறது.. அதனால்தான் ஆரம்பத்தில் கூகுளின் பிரம்மாண்ட திட்டங்களையும், இலவசங்களையும் கண்டு மயங்கிய நாம், இன்றுவரை அதன் படைப்புகளின் குறைகளையும் கஷ்ட்டப்பட்டு விழுங்கியபடி சிரித்து/சகித்து கொண்டிருக்கிறோம்...

தேடலும், முகவரிப்பட்டையும் ஒன்றாய் இருப்பதை தவிர, குரோமில் வேறு எதுவும் சிறப்பாக இருப்பதாய்ப் படவில்லை.. தகவல்களை பார்ப்பது, தனிமை அமைப்புகள் சரி பார்த்தல் , இணைய உலா விபரங்கள் நீக்குதல் , உட்பட எதுவுமே எளிமையாக அளிக்கப்பட வில்லை...

இதை என் இவ்வளவு ஆராய்கிறேன் , கூகுல் மேல் ஏதேனும் கோபமா என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால் இதை நினைத்துப் பார்த்ததில் , நம் நாட்டின் திருமணங்கள் ஓரளவு வெற்றி பெறுவதன் ரகசியமும், அரசியல்வாதிகள் பேரளவு வெற்றி பெறுவதன் அப்பட்டமும், இன்னும் சில விஷயங்களும் இது மூலம் எனக்கு பிடிபட்டன..

௧. மனம் புதியதை விரும்புகிறது.. நாம் அனுபவித்துக்க் கொண்டிருக்கும் பொருள்/ வாழ்கை/ சேவை நன்றாகவே இருந்தாலும், புதியது ஒன்று தோன்றினால் மனம் அலைபாய்கிறது..

௨. 'இலவசம்' என்ற சொல் எல்லாரையும் மயக்கும் மந்திரம்...

௩. இவை இரண்டும் (புதுமை/இனாம் ) இருந்தால் மற்ற பிற குறைகள் எல்லாம் கண் மறைந்து விடும்...

எங்கோ தொடங்கி, எங்கோ முடிப்பதே என் போக்கு என, என் ஒன்றிரண்டு பதிவை படித்தவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும்..

சொல்லத்தோன்றும் விஷயங்கள் நிறையவும், நேரம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்... கோர்வையாக எழுத முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கலாம்...



குறிப்பு: தோழி இனியா சுட்டியதை மனதில் வைத்து முடிந்த அளவுக்கு தமிழ்சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.. அதையும் மீறி ஆங்கிலச்சொற்கள் தோன்றி இருப்பதற்கு மறுபடியும் கூகுளைத்தான் குறை கூறுவேன்.. :-)
அவர்கள் தமிழ் அகராதியில் இன்னும் சேர்க்க வேண்டும்..!

பி. கு: என் கணினியில் இருந்து குரோமை அழித்துவிட்டேன் .. :-) வாழ்க நெருப்புநரி!(firefox), வாழ்க தமிழ்!!, வாழ்க என் வலைப்பூ!!! ... ஹீஹீ...

பி.பி.கு: இனி பதிவுகள் போடாமைக்கு குரோமை குறை சொல்ல முடியாது... அதனால் வேறு காரணங்கள் தேட வேண்டிஇருப்பதால், மறு பதிவு போட சிறிது காலம் ஆகலாம்.. :-)

Thursday, January 14, 2010

சத்தியமா இது ஒரு கவிதை....

வந்துடுச்சு வந்துடுச்சு புத்தாண்டு
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...

வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...

கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...

சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...

பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...

அதனால -

இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...

எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....

தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?