Monday, April 19, 2010

முடிவுறா கவிதைகள்....1

முன் குறிப்பு:

நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.

இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.

தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.

கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.

situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.

தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.

இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...

( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )

:பல்லவி :

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?

பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?

ஆண்: (பார்வைகள் புதிதா...)

பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?


பெண்: (பார்வைகள் புதிதா...)

நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?

ஆண் : (தொடத் தொட...)

விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?



: சரணம் :

ஆண்: (அந்த இள வயதில்...)

சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....

பெண்: (நந்தவனக் கரையில்...)

பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...

ஆண்: (காதலர் தீண்டாத...)

பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..

பெண்: (இடைவெளி தாண்டாதே...)

கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..

ஆண்: (தொடத் தொட...)

விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

பெண் : (தொடத் தொட...)

உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...



: சரணம் ௨:

ஆண்: ( பனிதனில் குளித்த...)

மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..

பெண்: ( பசித்தவன் அமுதம்...)

ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...

ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...

4 comments:

ayishu said...

Hey oli,Its very good.

நினைவுகள் தொலைவா,
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?

மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..

These lines were impressive ....
engeyo poite oli.....

Sugirtha said...

aha! pattu nalla varudhe Li kku :)

Janaki Ramalakshmi said...

Un Thamizh enaku pidichiruku!

Vazhthukkal :)

Vivek Raja said...

Machan. Kalakkal da! Vaazhthukkal!