Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.

7 comments:

நாகை சிவா said...

//வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..//

Good One.... வானம் தொட்டு விடும் தூரம் தான்... வைரமுத்துவின் புத்தகத்தை ஞாபகபடுத்தியது :)

Li. said...

கண்டிப்பா வைரமுத்து தாக்கம்தான். சொல்ல முடியாது, அந்த டையரியில நான் அவர் வரியா கூட கிறுக்கு வெச்சிருக்கலாம்.. அந்த காலத்துல அவர் போதையில தான எப்பவும் கெடப்போம்...

கவிதா | Kavitha said...

எதிர் கவிதை எழுதனும்னு தோணது..:)

1. முதல் கவிதை உங்க ஸ்பெஷல் போல.. :)

2. ம்ம்ம் வீட்டில் இல்லாம வெட்ட வெளியில இருந்தா?

3. மக்கு பாப்பா போல.. :)

4. இந்த புத்தர் இருக்காறே அவரை கண்டாவே எனக்கு ஆகறது இல்ல..
சரி, அதை தனியா சொல்றேன்.. .

கவிதா | Kavitha said...

புது பொலிவுடன் - ஒளி..:)

டெம்ளேட் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேன். .ஆனா முன்ன இருந்த டெம்ளேட் மறந்து போச்சி...

Took time but you did it.. :) Guess I could go for my next request..

Li. said...

@kavitha

1. ஆமாம் .
2. வெட்ட வெளியிலும் ஜன்னல் கம்பிகள் இருக்கின்றன.
3 . ஆம். இன்னும் 15 வருடத்தில் அதுவும் ஒரு மக்கு பாப்பா.
4 . சொல்லுங்க.

5 . பின்னூட்டங்களுக்கு நன்றி.

6 . (கவிதை சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது என்பதை கூறி முடித்துக்கொள்கிறேன் !)

7 . இதெல்லாம் எதிர் கவிதையா? இல்ல அது தனிய வருதா? :-p

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை குட்டியா இருந்தாலும் சரக்கு கெட்டி தான்

Vasu said...

Super liked all of them!