Saturday, October 23, 2010

அதிகாலைத் தேநீர் திட்டம்...

கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,

வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -

என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,

மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...

விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,

அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...

6 comments:

நாகை சிவா said...

Why Blood... Same Blood !

Li. said...

:-/ அப்டினா ?

Sugirtha said...

போகாமயே சுபமாகவா முடிஞ்சுது? ;)

மறுபடியும் முயற்சி பண்ணுங்க... ஏன்னா வாழ்கையில இத மிஸ் பண்ணக் கூடாது... :))

/வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை /

Li. said...

@Sugirtha: போனா என்ன கேடச்சிருக்குமோ தெரியலை.. போகாததுனால ஒரு கவிதை கெடச்சுது.....ரொம்ப நாள் கழிச்சு ... அதனால சுபம்! :-)

Anonymous said...

Nice to see that you are back.. I suggest you continue the same.. :)

-Ish.

Ayishu said...

Arambame super-athi kalai and cofee

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,- impressive

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்... puriyale...

போனா என்ன கேடச்சிருக்குமோ தெரியலை.. போகாததுனால ஒரு கவிதை கெடச்சுது.....Kalakita da....