Thursday, February 25, 2010

--



ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...

உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...

ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...

என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...

தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...

என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...



















குறிப்பு :
இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......