Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...