Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.