Saturday, November 06, 2010

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். ஒரு பட்டாசு கூட கொளுத்தாத சோம்பேறி தீபாவளி இன்று எனக்கு. வீட்டை விட்டு இந்நொடி வரை வெளியே கால் பதிக்க வில்லை. பதிவு எழுத வேண்டும் என்று மதியம் மழைச்சாரல் முதல், மாலை மஞ்சள் பூக்கள் வரை என்னை உந்தித் தள்ளி கடைசியில் இதோ...

என்ன செய்து கொண்டிருந்தேன் இந்த இரு வாரங்கள்... சச்சினுக்கு கல்யாணம்.. மூன்று நாள் விழாவில் இரண்டு நாட்கள் அடியேன் பிரசன்னம் . அதிகாலை ஆறு மணி முகூர்த்தம்... ஐந்து மணிக்கு எழுந்தும் ஏழு மணிக்கு முன் செல்ல முடியவில்லை. ரிஷிக்கு வேஷ்டி எடுத்து சென்றது மட்டுமில்லாமல், அதை அவன் இடுப்பில் நிற்கவும் வைக்க நான் பட்ட பாடு.... அய்யய்யோ.... (அவ்வளவு கடினமாக இல்லை.. சும்மா ஒரு காமடி-க்கு )

வழக்கம் போல் நாங்கள் இருவர் தான் கடைசி... :-) ஆனாலும் அந்த கடைசியில் நாங்க தான் heroes!!!!

late-ஆக போனதோடு, நண்பர்கள் எல்லோரும் வழக்கம் போல கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு அய்யரை பற்றி அடித்த comment-கள் இன்னுமும் 12 B touch விட்டு போகலை என்பதை தெளிவாக காட்டின.. சச்சினுக்கும் , அவன் காதலிக்கும் மனைவிக்கும் , நாங்கள் அணிந்து சென்ற மைனர் cooling glass-களை மாட்டி விட்டு, போட்டோ போஸ்... என்று மேடையிலயும் comedy தொடர்ந்தது .. இறுதியில் buffet-யில் bearer-களை கலாய்த்து, parking-இல் driver-களோடு இனிதே நிறைவு பெற்றது..

சென்ற ஞாயிறு indi blogger வலைப்பூ திரட்டி நடத்திய madras magic என்ற வலைப்பதிவுகளை மேடை நாடகங்களாக இயற்றும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.. சிவகாமி பெத்தாச்சி அரங்கம்..

பகுதிகள் நன்றாக இருந்தன, ஜூடி எனும் பெண் பதிவரின் கனவுக் காதலன், மற்றும் பெண் பார்க்கும் படலங்களை கிண்டல் செய்யும் நாடகம் மிகவும் பிடித்திருந்தது...

மற்ற இரு படைப்புகளும், பகுதிகள் பரவாயில்லை... நிறைவாயில்லை... ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரை வழிக்காத பல துணுக்குகளுக்கு, எங்கள் முன் வரிசை இளம் பெண்கள் விழுந்து விழுந்து , உருண்டு பிரண்டு சிரித்தது, ஒரு வேலை கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று கவலை கொள்ள வைத்தது நிஜம்...

பிறகு... வெங்கடாசலம் திருமணம்.. கடைசி நொடியில் நண்பன் மஞ்சுநாதன் அழைத்து நினைவூட்ட வில்லை என்றால் :-( ??? 9 மணிக்கு ஓடினேன்... ஆனாலும் ஒரு மகிழ்ச்சி.. நண்பர் திருமண விழ attendance 90 % மேல் சீராக வைத்துக் கொண்டிருக்கிறேன்... பெருமை.


வேறென்ன...