Wednesday, April 20, 2011

இனி எல்லாம் சுகமே......

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....

உன் நெஞ்சிலே பாரம்....
உனக்காகவே நாளும்...
சுமைதாங்கியாய் தாங்குவேன்...

உன் கண்களின் ஓரம்...
எதற்காகவோ ஈரம்....
கண்ணீரை நான் மாற்றுவேன்...

வேதனை தீரலாம்...
வெறும்பனி விலகலாம்....

வெண்மேகமே.....
புது அழகிலே
நாளும் இணையலாம்...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை...

வாழ்வென்பதோர் கீதம்...
வளர்கின்றதோர் நாதம்...
நாளொன்றிலும் ஆனந்தம்...

நீ கண்டதோ துன்பம்...
இனி வாழ்வெலாம் இன்பம்...
சுக ராகமே ஆரம்பம்...

நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது...
நம் சொந்தமோ
இன்று பிணைந்தது
இன்பம் பிறந்தது...

உறவுகள் - தொடர்கதை
உணர்வுகள் - சிறுகதை..
ஒரு கதை இன்று முடியலாம்..
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
இனி எல்லாம்..... சுகமே.....





3 comments:

நிழற்குடை said...

இசைஞானியின் இசையில் (அவர்தானே?) கருப்பு வெள்ளையில் வெளிவந்த மனம் மயக்கும் பாடல். எப்போது‍ கேட்டாலும் ஏதோ ஒரு‍ தளத்திற்கு‍ நம்மை அழைத்துச் செல்லும்.

Sugirtha said...

:) wonderful song pa. Lyrics chance eh illa ponga...

Li. said...

@நிழற்குடை : -)

@இனியா : ஹாஹா... யாரோ எழுதுன பாடுக்கு எனக்கு பாராட்டா? :-) வருகைக்கும், பதிவர்க்கும் நன்றி நன்றி!