Thursday, September 29, 2011

நெடுநாள் கடிதம்...

வாழ்க்கையின் சுழலில் சிக்கி அதை காரணம் காட்டி நம் பல வேலைகளை தட்டி கழித்து காரணிகள் புனைவது மிக மிக சுலபம்... அதைத் தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்..

வலைப்பூ பின்ன நேரம் இல்லாமல் இல்லை... கண்ட கழிய Site -க்களில் நேரம் செலவழிப்பதில் ஒரு பங்கு தான் ஆகப் போகிறது... (நான் facebook போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத site -களை பற்றி சொல்றேன்பா ) ஆனாலும் நேரமில்லை... வழக்கம் போல்.. 

இந்த மாதத்தில் நான் ரெயிலில் தனியாக பிரயாணம் செய்வது இது இரண்டாம் முறை. முன்பு தனியான பிரயாணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. பொதுவாக தனிமையே எனக்கு மிகப் பிடத்த ஒன்று...முன்பெல்லாம்...

இப்பொழுது இல்லையா? பிடிக்காமல் போய் விட்டதா என்ற கேள்வி தோன்றினால், ஆம் என்று கூற மாட்டேன்... ஆனால் முன்பு அளவு நான் எதையுமே ரசிப்பதில்லை என்பதுதான் உண்மை... :-( அதற்கான காரணம் எனக்கே புரியவில்லை....பிடிக்கவில்லை..

கடற்க்கரையில் காலாற நடக்க உந்துதல் இல்லை... கவிதைகள் வடித்து காலங்கள் ஆகிவிட்டது...  புத்தகங்கள் படிப்பதில்லை.. கடவுளே, இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல விஷயமும் காண போய்கிட்டு இருக்கு.. நீதான் காப்பாத்தனும்...


மங்காத்தா  பார்த்தேன்... சில முறைகள்... படம் பரவில்லை... Ajith என்ற தனி மனிதன் இரண்டே முக்கால் மணி நேரம் படத்தை நகர்த்தி செல்கிறான்... வேறு எதுவும் impressive-வாக இல்லை... வெங்கட் பிரபு என்னாச்சு பா ? 

அலுவலகம் கொஞ்சம் கடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது... வாழ்க்கை முழுக்க இதைப்போல்தான் இருக்குமோ என்ற பயம் தோன்றுகிறது... சுவாரஸ்யம் பத்தாது இதில்... சீக்கிரம் வேற எதாச்சும் பண்ணனும்... 

கோபிகா, மாதங்கி, அமிர்த சுகி , jatthin , இம்தியாஸ் , எல்லோரும் முறையே அப்பா , அம்மா ஆகி இருக்கிறார்கள்... :-) நெஞ்சம் நெகிழ்கிறது... 

அகமத் அலி, மீரா சாகிப், ஐஸ்வர்யா , எல்லோரும் இப்பொழுது தான் 3 முடிச்சி இட்டு இருக்கிறார்கள்... அடுத்தது மகதீர், மாமா, மகேந்திரன், மோனிகா, மற்றும் சிலர் தயார்நிலை.... வாழ்க்கை தன வழக்கமான ஜெட் வேகத்தில் பின்னிப் பறந்து கொண்டிருக்கிறது... 
நண்பனாக , மாமா-வாக, சிற்றப்பனாக  என்  கடமைகள்  பலவற்றை செய்யாமல் கடத்தி வருகிறேன்... ஹும்ம்... இனிமேலாவது உருப்படவேண்டும்...

நிறைய எழுத வேண்டும்... பின்னிரவு வருகிறேன்...