Friday, September 07, 2012

சிறகுகள்..



சிறகுகள் தேடுமுன் ,
உன் வானத்தை தேடிடு. 
சுய கூண்டுக்குள் வாழ்கையில்,
பெரும் சிறகுகள் சுமைகளே...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--