Tuesday, August 26, 2014

அளவோடு நம்பி, வளமோடு வாழ்க...

கடவுள் இருக்காரா இல்லையா?
பாத்திருக்காங்களா பாக்கலையா?
நம்பலாமா நம்பப்புடாதா?
அப்படி இருந்தா அதுக்கு எதாச்சும் அறிகுறி தெரியுமா?

இப்படி உலகம் முழுக்க இருக்க மக்களுக்கு வடிவேலுவுக்கு இருக்குறாப்ல சந்தேகம் நெறையா இருக்கு... அதை ரஜினிகாந்த் மாதிரி தீர்க்க எனக்கு தெரிஞ்சதை சொல்லலாம்னு நெனைக்கிறேன்...

நல்லா கேட்டுகோங்க....

இந்த உலகம் FACEBOOK மாதிரி...

நாமெல்லாம் ஒரு ஒரு User.. / Profile- மாதிரி ...

கடவுள்தான் ----> MARK ZUCKERBERG. அவர்தானே FACEBOOK-ஐ  படைச்சவரு. அவர் நினைச்சா FACEBOOK-ஐ  அழிக்கவும் முடியும்.

"கடவுள் இல்லை .. அப்படி ஒருத்தர் இருந்தா இப்படி எல்லாம் உலகத்துல தப்பு நடக்குமா, அழிவு இருக்குமா... ", "அப்டி இப்டி எப்டி"ன்னு கேள்வி கேட்கிறவங்களுக்கு..

FACEBOOK-ல இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் அவங்க அவங்க PROFILE-ஐ  அவங்க அவங்கதான் CONTROL பண்றாங்க.. என்ன செய்யிறோம், என்ன எழுதுறோம், யார் யாரை  FRIEND-டா  சேர்க்கிறோம், எந்த GROUP-ல MEMBER ஆகுறோம், எல்லாமே அவங்கவங்க கையில தான் இருக்கு..

 இது எல்லாத்தையும் ZUCKERBERG -ஆ பார்த்துகிட்டு இருக்காரு?
இல்லைல்ல ? அது மாதிரிதான் நம்ம REAL WORLD கடவுளும்.

அவர்தான் கடவுள். அவர் நெனச்சா யார்  PROFILE-லையும்  அழிக்க முடியும், எந்த POST -டையும் தூக்க  முடியும், DELETE-டான  எந்த போட்டோவையும் திருப்பி கொண்டு வர முடியும்....CORRECT -தான்.... ஆனா அது அவர் வேலை இல்ல.... படைச்சு  நம்ம கையில குடுத்துட்டாரா? அத்தோட அவர் வேலை OVER . அவர் மத்த மத்த பெரிய பிரச்சனைகளை பார்க்க போயிட்டாரு.. நமக்கு பிரச்சனைன்னா நாம BLOCK பண்ணிக்கலாம், மீறி போனா REPORT பண்ணிக்கலாம், கடவுளோட TEAM  பார்த்து அவங்க RULES  படி முடிவு எடுப்பாங்க...

* மத்தபடி, கண்ணாடிய  காணோம்-கண்டு பிடிச்சு குடு,
* பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் அம்மா என் பையனை கண்ணு வெக்கிறாங்க - அவங்களுக்கு கண்ணை குத்து,
*பரிட்சைல,  நல்லா படிக்கிற நாராயணனை பக்கத்துல உக்கார வை-

இதெல்லாம் அவர் வேலை இல்ல... அவனவன் கவலை/ வேலை.

பெரிய VIRUS  ATTACK , 6,00,0000 PROFILE -ஐ HACK பண்ணிபுட்டானுங்க , SERVER OUT , இது மாதிரி பெரிய பிரச்சனைன்னா அவர் கவனிப்பாரு...

So, மக்களே, கடவுளை ரொம்ப DEPEND பண்ணாதீங்க, கடவுள திட்டாதீங்க, ரொம்ப நம்பாதீங்க.

இப்போ சொல்லப் போறதுதான் ரொம்ப முக்கியம், கவனமா கேளுங்க...

நமக்கு எப்புடி அவர் தேவையோ, அதே மாதிரி அவருக்கும்  நாம தேவை..
ஆமா,பின்னே,  USER  எல்லாரும் ORKUT மாதிரி இந்த FACEBOOK-கையும் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டா அவரும் OUT ஆயிடுவாரே! ... அதனால கண்டிப்பா நமக்கெல்லாம் பெருசா ஏதும் ஆக விட மாட்டாரு நம்ம ZUCKERBERG.

SO, எல்லாரும் அளவோடு நம்பி, வளமோடு வாழ்க...










விதை விழுந்தால்  முளைத்திடுமே...
மரம் விழுந்தால்  பிழைத்திடுமா?



சிறியவனாய் இருக்கயிலே
அனுபவங்கள் பழகவிடு.