".....மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ ?"
கொஞ்சம் துயரம் என்றால் -சொல்லில்
கொட்டித் தீர்த்திடலாம் , இந்த
நெஞ்சம் பிளக்கும் வலி சொல்ல -
சொல்லில் என் தமிழில்..
உண்னை மரணம் பிரிக்கும் கனா
கண்டு துடித்து துவண்டதுண்டு ..
உன் மணனம் பிரிக்கும் என
கண நொடியும் நினைக்கவில்லை...
சிந்தையில் தெளிவுமில்லை இன்று-
அன்னம் தின்னவும் தோன்றவில்லை
மந்தையை தொலைத்த கன்றாய் - நின்று
திக்கற்று புலம்புகிறேன்.
உண்னை சந்தித்த தேதி முதல்
என்னை என்றைக்கும் மாற்றிவிட்டாய்,
பின் என்னை சந்தித்த மனிதரெல்லாம்
சந்தித்த துன்னையன்றோ?
கிஞ்சிற்றும் மாற்றமில்லை- என்
வாழ்காலம் உன்னோடுதான்.
விஞ்சிட்ட நாட்களெல்லாம் உன்
முகம் சிந்தித்து கொன்றிடுவேன்.