Thursday, June 28, 2012

குறை ஒன்றும் இல்லை ...

குறை ஒன்றும் இல்லை இறைவா
சிறை ஏதும் மனம் பூட்ட இல்லாத வரை .

குறை ஒன்றும் இல்லை இறைவா
தரை மீதும் துயில் வந்து மீறும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
நிறை என்று  யாவும்  காணும் வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
கரை என்று உன்னை நோக்கும்   வரை

குறை ஒன்றும் இல்லை இறைவா
பறை ஒன்று கேட்காமல் போகும் வரை..