Friday, January 09, 2015

விடு

யாக்கை உதறிவிட்டு
யானும் வான் பறந்து
பறவைப் பார்வையிலே
வாழ்வைப் பார்க்கயிலே

கவலைகள் அரிப்பதில்லை
கடவுள்கள் தடுப்பதில்லை
பொய்த்துணைத் தேடவில்லை 
மனப்-பேய்களும் ஆடவில்லை..

கொண்டது இழப்பதுவோ
கண்டது பிடிப்பதுவோ
நோய்ப் புண் துடிப்பதுவோ
எதுவும் மிடிமையில்ல..


வயிறும் நாக்குமில்லை
வன்மம் தொடர்வதில்லை
கதிர்-நிழல் கடவுமில்லை  
நாளைசெய் கடனுமில்லை..


ஒற்றை அச்சம் மட்டும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே...



இக்-கவிதை  முடிக்கையிலே 
என் வாழ்க்கை  திரும்பிடுமே....

:-(