Saturday, April 03, 2010

--


மு . கு. குளியலுக்கு செல்லும் முன் 'சுட்டும் விழிச்சுடர்தான் ' பாரதியார் பாடலை ஹரிஹரன்குரலில் பருகிய போதையில் , குளியலின்போது படபடவென தோன்றின கீழுள்ளவை ...

சூடு நன்றாகவே விழுந்துள்ளதாக பெருமை பட்டுக்கொள்ளும் இந்த பூனை, அதே ராகம், தாளம், குரலை கற்பனை செய்து எழுதிய வரிகள்.. எனக்கு மிகவும் பிடித்துஎழுதிய கவிதைகளுள் ஒன்று... உங்கள்கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்...



--
ஆட்கொள்வையோ தோழி....



தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி..

உன் கன்னச் சுழல் குழியில், என் முத்தங்கள் நட்டுஅவை -உன் ,
சின்ன இதழ்பூத் - தென்னைச்சேரும் கனவு கண்டேன்...

இட்டு நிரப்பிவிட, கடல் எட்டும் பற்றாத - என்
ஆசை குமிழ் மனதுன் (ஒரு) மூச்சினில் நிறையுதடி ...

விண்ணைக் கொளுத்தும் கதிர்- கூட உன்போ லெரிக்கவில்லை
என் உள்ளம் எரித்தாடும், நிலவே - கொஞ்சமும் இறக்கமுண்டோ?

பதின் -சித்திகள் வேண்டாமடி, அடியே , முக்திகள் வேண்டாமடி...
காற்றினிலே கலந்து- உன்னைக் கண்டிருந்தால் போதும்...

ஆட்கொள்வையோ தோழி - நீ , என்திசை கண் அசைந்து - அல்ல
தாட்கொல்வையோ தோழீ - தென் திசை எனக்கிசைந்து...

தொட்டு விடும் தொலைவோ என்றே நிலவு அருகுதடி- உன்
பட்டவிழ்த்த உடலோ எனவே நினைவு மருகுதடி.... (௨)








பி.கு. பின் குறிப்பாக கொடுக்காமல், முன் குறிப்பு கொடுத்த காரணம், என்ன எதுஎன்று அறிவிப்பின்றி மேலுள்ள கவிதையை படித்துப் பார்த்தல் ஒன்றும் புரியுமா என்ற பயம் .. ஹீ ஹீ... :-) நன்றி...


7 comments:

thamilmagal said...

ஒளி,
உனக்கு கவிதை ந்ன்றாக வருகிறது.வாழ்த்துக்கள். காதலும் கவிதையும் பிரிக்க முடியாத இணைகள் என்பதை நீயும் நிருபித்து இருக்கிறாய்.இனி வரும் முயற்சிகள் உன்னை இன்னும் பட்டை தீட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரேமா

Unknown said...

:)

Sugirtha said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த பாடல். நல்லா எழுதி இருக்கீங்க Li! ஒரு முறை பாடிக் கூட பார்த்துகிட்டேன். :)

ஹா... இப்ப ஞாபகம் வருது, நீங்க திட்டும் கேட்டீங்கில்ல? எழுத்து பிழை நிறைய இருக்கு.. திருத்திடுங்க..

Arulz said...

Really good oli... makes me miss all those time when we tried to write proper poetry while 'studying'... :)

vara vara love feeling romba jasthiya irukke??

Li. said...

@ goblet of wine: Enna sirippu?

@ sugirtha: romba romba :-D nejamma naan ellarum apdithaan padikkanum-nu nenachen... paadi, rasichu... :-) adhuku thaan mun kurippu ellam kudutthu ivlo build up..

but spelling mistake-ai kandupidikka mudiyalai iniya... 'sandhigal', 'kuril/nedil' sila idangal-la maari varuvathai solringa-na, adhu isaikaaga,kavithaikaaga idappattvai/vidappattavai.. matrabadi thayavuu seinju enna pizhai-nu sollidunga, illana thalai vedichidum... @-/

@zuzu : :-) zuzu, super la? enakkum nyabagam irukku zu.. ippo kooda FM keta andha nyabagangal thaan...

உயிரோடை said...

வாவ் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள்

Anonymous said...

Beautiful..

-Ish.