Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, March 28, 2017

கடவுள்

இயற்கையின் /இறையின் படைப்பில் பசி, காமம்(புணர்தல்/சந்ததி செய்தல்), தூக்கம், கழிவேற்றல் போன்ற உணர்வுகள் கடைசி மனிதன்-மனிதிவரை , ஏன் புழு-பூச்சி-கிருமி வரை பொதுவானதாக இருக்கின்றன,
ஆனால் உலகெங்கும் வழிபடப்படும் கடவுள்களும், அவர்களின் தொழுகை, பூஜை, நோன்பு, ஜெபம், என வழிபடும் வழிகளும், அவரின் மொழிகளும், எதுவுமே பொதுவானதாக இல்லை, எப்படி?
இந்த எல்லா மதங்களும் கடவுள்களும் சிறு சிறு பூகோள வட்டங்களுக்குள் பிறந்து பின்பே பரப்பபட்டு இருக்கின்றன. ஏன்?

பிறந்த கன்றிற்கு, தாயின் மடி யாரும் காட்டாமலே தெரியும் அந்த உணர்வைப் போல, ஒவ்வொரு உயிரும் தானாகவே படைத்தவனை உணர வேண்டாமா? தாமாக யாரும் உணராத கடவுள் எப்படிக் கடவுளாக இருக்க முடியும் ? உறக்கம் சுழற்றும் பொழுது கண்ணை மூட யாரும் கற்றுத்தர வேண்டி உள்ளதா?

பின், மிக மிக இயற்கையான இறைவனையும், அவரை வழிபடும் அவசியத்தையும், அவரின் வழிகளையும், ஏன் ஒரு குரு, ஒரு தூதர், ஒரு ஞானி, ஒரு பூசாரி நமக்கு கற்பிக்க வேண்டி உள்ளது?

இல்லை, படைத்தவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை, அவன், நாம் அவனை நம் அறிவால் உணர வேண்டும் என்றே இவ்வாறு படைத்தான் என்று கூறினால்.....

அவரவர் உணர்ந்து கொள்ள விடாமல், போதித்து, போதித்து வழி நடத்துவது இறைவன் மறைக்கு எதிர்மறையானதல்லவா?

Friday, September 18, 2015

Why Trisha illana Nayanthara may be a movie to hate, but is definitely a movie we need!



Watched Trisha illana Nayanthara today. First day. It was a complete shocker. It is an out and out teenage/coming of age/romance/ sex comedy, a genre tamil cinema has not seen in a long time. Interestingly and incidentally I happened to watch Manmadhaleelai in Raj Tv a couple of days back and was wondering what happened to such films and to wherever sex comedies or honest adult themed films disappeared from tamil movie industry.

Now, I didn't like many things in/ about the movie. For one, I hated the regressive note throughout the movie brought out by the hero, that it is absolutely unacceptable for girls to drink and suggestions to women about 'asingamana' dressing and partying (but how it is okay for men to drink, party and do whatever) and how 'virginity' is an important necessity in love and how men who don't care if a girl is virgin are 'thiyagis' and how the film's hero claims he is not one such 'thiyagi' (read 'loser').

(Btw, to the director's credit,  the movie also shows the male lead to be a hypocrite who is himself a virgin only due to lack of opportunities and who would buy beer to a woman if it suits his cause.)

But these are the very reasons that make me feel so strongly about why we need  'Thrisha illana Nayanthara's more often.  With its cheap jokes, taboo themes and innuendos, the movie shocks some of us, makes some of us hide our faces, some shift in our seats, some of us cover our laughter, but makes all of us check the next seat after we let out that guilty chuckle. The very same things we Indians so righteously criticize, scorn and so refuse to enjoy - in public. This is very important.

We need these shocks from time to time to make the us, the Tamil/Indian audience break from the bluddy, Super Sensitive , Intolerant, mindsets we have developed through decades of being fed only carefully picked, culturally 'sensible' , chauvinistic stereotypes acceptable to our 'culture'.

For eg. like how  the heroine, even if portrayed a widow or divorcee should always be a virgin (either the guy she marries compulsorily  dies or gets separated before consummation of the marriage), or how the heroine can never get raped (by anyone other than the hero), and how there is never any actual talk on anything intimate like masturbation, or making out, or any other physical personal sexual activities. Even 'intercourse' is mentioned only if it somehow changes the course of the story, and how fancying luxury and wanting to make money (esp for female characters) is evil, etc.,

Feeding us with these same beaten ideas has made  us, the audience, insanely sensitive to anything else that we are not used too.  Which is why, the huge cries and outrages and hartals and violence when anybody says anything even remotely different from what we know, what we believe, what we like or  what we are ready to accept.

Come on, it has been 30 years since a #panneer pushpangal, #manmadhaleelai, #arangetram,  #vedham pudhidhu  or any such bold attempts. It has been 12-15 years since the last attempts at decent, honest coming of age / adult comedies like #boys or #thulluvadho ilamai.

More movies like Trisha illana Nayanthara, from time to time, will get the audience more used to themes that are in the shadow and make them more acceptable to cultural shocks and other taboo ideas which all of us may not agree with. And more such creative works, (Movies, Arts, Plays, Albums, Shows) will get us used to seeing, hearing, coming across things we don't feel okay about.

More movies with bold and shocking themes and content like Trisha illana Nayanthara, (not only sex comedies, but adult themes, religious criticisms, introspection on the society, alternate views on historical events or figures, etc.,) will actually distribute the outrage and over sensitivity of the audience and get people used to sensitive things being brought out in public. More importantly,understand people have the right to say what they want, and you may not always like what they want to say.

I do not know if the director realises the importance of his work. Heartfelt wishes to this game changing attempt.

#trishaillananayanthara, #adhikravi, #richardmnathan, #umeshjkumar

Friday, January 09, 2015

விடு

யாக்கை உதறிவிட்டு
யானும் வான் பறந்து
பறவைப் பார்வையிலே
வாழ்வைப் பார்க்கயிலே

கவலைகள் அரிப்பதில்லை
கடவுள்கள் தடுப்பதில்லை
பொய்த்துணைத் தேடவில்லை 
மனப்-பேய்களும் ஆடவில்லை..

கொண்டது இழப்பதுவோ
கண்டது பிடிப்பதுவோ
நோய்ப் புண் துடிப்பதுவோ
எதுவும் மிடிமையில்ல..


வயிறும் நாக்குமில்லை
வன்மம் தொடர்வதில்லை
கதிர்-நிழல் கடவுமில்லை  
நாளைசெய் கடனுமில்லை..


ஒற்றை அச்சம் மட்டும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே...



இக்-கவிதை  முடிக்கையிலே 
என் வாழ்க்கை  திரும்பிடுமே....

:-(


Tuesday, August 26, 2014

அளவோடு நம்பி, வளமோடு வாழ்க...

கடவுள் இருக்காரா இல்லையா?
பாத்திருக்காங்களா பாக்கலையா?
நம்பலாமா நம்பப்புடாதா?
அப்படி இருந்தா அதுக்கு எதாச்சும் அறிகுறி தெரியுமா?

இப்படி உலகம் முழுக்க இருக்க மக்களுக்கு வடிவேலுவுக்கு இருக்குறாப்ல சந்தேகம் நெறையா இருக்கு... அதை ரஜினிகாந்த் மாதிரி தீர்க்க எனக்கு தெரிஞ்சதை சொல்லலாம்னு நெனைக்கிறேன்...

நல்லா கேட்டுகோங்க....

இந்த உலகம் FACEBOOK மாதிரி...

நாமெல்லாம் ஒரு ஒரு User.. / Profile- மாதிரி ...

கடவுள்தான் ----> MARK ZUCKERBERG. அவர்தானே FACEBOOK-ஐ  படைச்சவரு. அவர் நினைச்சா FACEBOOK-ஐ  அழிக்கவும் முடியும்.

"கடவுள் இல்லை .. அப்படி ஒருத்தர் இருந்தா இப்படி எல்லாம் உலகத்துல தப்பு நடக்குமா, அழிவு இருக்குமா... ", "அப்டி இப்டி எப்டி"ன்னு கேள்வி கேட்கிறவங்களுக்கு..

FACEBOOK-ல இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் அவங்க அவங்க PROFILE-ஐ  அவங்க அவங்கதான் CONTROL பண்றாங்க.. என்ன செய்யிறோம், என்ன எழுதுறோம், யார் யாரை  FRIEND-டா  சேர்க்கிறோம், எந்த GROUP-ல MEMBER ஆகுறோம், எல்லாமே அவங்கவங்க கையில தான் இருக்கு..

 இது எல்லாத்தையும் ZUCKERBERG -ஆ பார்த்துகிட்டு இருக்காரு?
இல்லைல்ல ? அது மாதிரிதான் நம்ம REAL WORLD கடவுளும்.

அவர்தான் கடவுள். அவர் நெனச்சா யார்  PROFILE-லையும்  அழிக்க முடியும், எந்த POST -டையும் தூக்க  முடியும், DELETE-டான  எந்த போட்டோவையும் திருப்பி கொண்டு வர முடியும்....CORRECT -தான்.... ஆனா அது அவர் வேலை இல்ல.... படைச்சு  நம்ம கையில குடுத்துட்டாரா? அத்தோட அவர் வேலை OVER . அவர் மத்த மத்த பெரிய பிரச்சனைகளை பார்க்க போயிட்டாரு.. நமக்கு பிரச்சனைன்னா நாம BLOCK பண்ணிக்கலாம், மீறி போனா REPORT பண்ணிக்கலாம், கடவுளோட TEAM  பார்த்து அவங்க RULES  படி முடிவு எடுப்பாங்க...

* மத்தபடி, கண்ணாடிய  காணோம்-கண்டு பிடிச்சு குடு,
* பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் அம்மா என் பையனை கண்ணு வெக்கிறாங்க - அவங்களுக்கு கண்ணை குத்து,
*பரிட்சைல,  நல்லா படிக்கிற நாராயணனை பக்கத்துல உக்கார வை-

இதெல்லாம் அவர் வேலை இல்ல... அவனவன் கவலை/ வேலை.

பெரிய VIRUS  ATTACK , 6,00,0000 PROFILE -ஐ HACK பண்ணிபுட்டானுங்க , SERVER OUT , இது மாதிரி பெரிய பிரச்சனைன்னா அவர் கவனிப்பாரு...

So, மக்களே, கடவுளை ரொம்ப DEPEND பண்ணாதீங்க, கடவுள திட்டாதீங்க, ரொம்ப நம்பாதீங்க.

இப்போ சொல்லப் போறதுதான் ரொம்ப முக்கியம், கவனமா கேளுங்க...

நமக்கு எப்புடி அவர் தேவையோ, அதே மாதிரி அவருக்கும்  நாம தேவை..
ஆமா,பின்னே,  USER  எல்லாரும் ORKUT மாதிரி இந்த FACEBOOK-கையும் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டா அவரும் OUT ஆயிடுவாரே! ... அதனால கண்டிப்பா நமக்கெல்லாம் பெருசா ஏதும் ஆக விட மாட்டாரு நம்ம ZUCKERBERG.

SO, எல்லாரும் அளவோடு நம்பி, வளமோடு வாழ்க...









Friday, January 11, 2013

(நானும்) நின்னைச் சரணடைந்தேன்....

காலை எழுந்தவுடன் FB ,
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,
வேலை முழுவதிலும் OB ,
வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,
இப்படி வாழ்ந்திடும் பாவி,
இவனை நீதான் காக்கணும் தேவி!!

Tuesday, January 01, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்!- 2013

வெயில் கோடையில் குளிர் தேடிடும்,
குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,
'மனதர்' ஆகினோம்..

மனப் பாதையில் தினம் ஓடினோம்,
அதன் ஆசையில் நூலாடினோம்,
பாதை தேடினோம்.

விரதமும் இட்டு வாடினோம்,
கடவுளும் சற்று சாடினோம்,
ஏது குழம்பினோம்.

தினம் தேதிகள் அவை மாறிடும்,
ஆண்டுகள் உருண்டோடிடும்,
வயது கூடிடும்.

சக மனிதனின் ரணம் ஆற்றி நாம்
சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம்
நாட்கள் நிரப்புவோம்

வெறும் தேதிகள் என்றாகிடா,
கண் திறக்குமுன் ஓடிடா

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


புத்தாண்டு வாழ்த்துக்கள் !





Sunday, October 07, 2012

தூரம்...

அன்புள்ள வைபர் ராட்சஷி,

உன்னைத் தேடி ஒரு கணத்தில்,
வின்னைத்தாண்டும் என் மனது,
உடலை தாங்கி-யும் சென்றால்
என்னவென்று ஒரு கனவு...

விழிகள் மூடி அரை நொடியில்,
உனைத் தந்து சேர்க்கும் என் கனவு,
விழிப்பை தாண்டி-யும் நிஜமாய்
நீள துடிக்குதென் மனது...

Friday, October 05, 2012

தொடங்கிவிட்டேன் பயணத்தை.





துருவத்தில் மீனாக
மனவெளியில் உருவித்தாய்

உனைக் காணும் பயணத்தில்
அடைவேனோ உடைவேனோ..

அடைந்தாலும் தொடுவேனோ,
கண்தீயால் சுடுவாயோ ?

உடைந்தாலும் அழுவேனோ
உன் மார்பை தருவாயோ?

விடைகான ஒரு வழிதான்...
...
தொடங்கிவிட்டேன் பயணத்தை...

Monday, September 03, 2012

உரிமை கொள்ளும் காலம் எப்போ?






கடலாடும் நிலவே நீ,
என் கனவாடும் பெண் போல்தான்...

கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,
நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன?

குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய?
உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ?


--

Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.


Tuesday, November 29, 2011

வலைப்பூ-2

அழைத்தேன்... "மச்சி, எனக்கு ஒரு அர்த்தம்   தெரிஞ்சாகனும் " என்று முதல் மரியாதை கிழவன் கணக்காக தொடங்கினான்... அய்யயோ, இன்று செய்தளித்த presentation -இல் ஏதோ சொதப்பல் போல என்று எண்ணியபடியே "என்ன மச்சி, சொல்லுடா", என்றதும்...
"தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு  வந்தால் போதுமா , அது மானாபிமானங்களை காக்குமா ?!!!" என்று உரத்த குரலில் பாட தொடங்கி விட்டான்... "மச்சி, இந்த lines- க்கு விளக்கம் வேணும்டா " என்றான்.. :-)

ஆமாம்...இதே ஆச்சர்யம்தான் எனக்கும்... சீதனம், மான/ அபிமானம்  எல்லாத்திற்கும் ஒவ்வொன்றாய் விளக்க... "மச்சி, சூப்பர்-டா... அவன் *&^%%$$@# டா அவன்... (கண்ணதாசன் )" என்று புளகாங்கிதமாக கவிஞரை நாலு கெட்ட வார்த்தைகளால்(!!) பாசம் கொட்டி , பாராட்டி விட்டு... 'தாழையாம் பூ முடிந்து..' பாகப் பிரிவினை பாடலை முழுவதுமாக என்னோடு speaker- இலேயே கேட்டுவிட்டு உறங்கப்போனான்...


நினைத்துப் பார்க்கிறேன்.... நான் நள்ளிரவில் பாடல் கேட்டு எவ்வளவு காலம் ஆகிறது... ஹ்ம்ம்... இன்றிரவு...




வலைப்பூ...

இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்களில் ஒரு meeting -ற்குச் செல்ல வேண்டும்... திடீர் என்று வலைப்பூ தொடுக்க உந்துதல்.. நேற்று நள்ளிரவு 12 :30 -க்கு ரிஷியிடம் இருந்து ஒரு sms , "Machi, r u awake?" இன்று ஒரு முக்கியமான presentation-க்காக 10 மணி வரை என் அலுவலகத்தில் இருந்து விட்டு சென்றவன் திடீர் என்று தேடுவதில்  ஒரு பதற்றம், நானே அழைத்தேன் (நம்புங்கள் , நான் பெண் பிள்ளைகளை மட்டும்தான் திரும்ப அழைப்பேன் என்று சுட்டும் நல்லுள்ளங்களே... :-p ),

அடடா... meeting ஆட்கள் வந்து விட்டார்கள்.... வந்து தொடர்கிறேன்........

Thursday, May 26, 2011


அமுது, அமுதன்
, பேபி, தாத்தா, stara, zuzu, அருள், அருள் குணாளன் என்ற நாமகரனங்களால் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நிலங்களில், அழைக்கப்பட்ட/அழைக்கப்படும் என் ஆசை மச்சானின் ஒரு சமீப முகநூல் (அதானுங்க, 'facebook') மனநிலை வாக்கியம் (status message) - 'கௌரவ வாக்கியம்னு' போடலாம்னு பார்த்தேன்...பின்ன... 'status'-naa கெளரவம்தானே ...but...வேணாம் ....

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த வாக்கியத்தில் உள்ள உண்மை என்னை பொளேர் என்று அரைகிறது... எனக்கு மட்டுமல்ல... என்னை சுற்றி, எனக்கு அருகில், என்னை விலகி, நான் அறியா, எனை அறிந்த .. எல்லா மனிதரின் வாழ்க்கையையும் / மன நிலையையும் பளிச்சென்று படம் பிடித்த இரட்டை வரி..

காரணம் இல்லா... காரணம் புரியா... தேடல் தீர்ந்த... தேடல் தெரியா... pointlessness in life....

எதற்கு எழுகிறேன்... எதை நோக்கி ஓடுகிறேன்... எதை அடைவேன்... ஏன் அதை தேடுகிறேன்... தெரியவில்லை...

அனால் பொழுது விடிந்து விட்டது.... எழ வேண்டும்... ஏன் என்றால் உலகம் எழுகிறது... நீயும் எழ வேண்டும்...

சரி...எழுகிறேன்...

உன் வயதுக்காரர்கள் பணம் தேடுகிறார்கள்..

சரி... நானும் தேடுகிறேன்...

கல்யாண வயது (??!!) அடைந்து விட்டாய்...

சரி மனமேடை சேர்கிறேன்...

நான்கு வருடங்கள் ஒரே வேலையிலா இருக்கிறாய் ???

சரி இருக்கும் வேலையை விட்டு விட்டு இரெக்கை தேடுகிறேன்...


ஆனால் உண்மையில் எனக்கு என்ன வேண்டும்...? எனக்கு எது மகிழ்வு?? நான் எழ காரணமில்லா நாட்கள் இருக்கவே கூடாதா?

எனக்கு எழ பிடிக்கவில்லை ....

எனக்கு இன்று உண்ண , உடுத்த பணம் இருக்கிறது... பணம் தெவை படுகையில் எழுந்து உழைத்துக் கொள்கிறேன்..

எனக்கு இருக்கும் வேலையே போதும்... இன்னொரு சில லட்சத்திற்காக பாழூர் வரை தினம் சென்று வெந்து (ஆமாம் வெந்து தான் )வர எனக்கு அவசியம் இல்லை...

எனக்கு திரு'மணம்' செல்லவில்லை... நாற்பதில் துணை தேவைப்பட்டால் நாற்பதில் தேடிக்கொள்கிறேன்...

எனக்கு எழ காரணமில்லை...விடுங்களேன்... please......



பி .கு . இனியாவின் இந்த பதிவின் - http://iniyasnehidhi.blogspot.com/2008/12/mozhiyil.html , எனது தினப் போலம்பல்களின் , கோடான கொடி மானிடப் பதர்களின் வாழ்கையின் ரத்தின (உண்மையிலேயே) சுருக்கம்தான் அமுதனின் அவ்விரு வரிகள்....

Sunday, February 20, 2011

செல்லமே...

அதிகாலை வாய்க் கசப்பில்
விழிக்கிறேன்...

எழ வேண்டிய நேரம்தான்
என்றாலும்,

வாயின் கசப்பு எழுப்பியதை
எண்ணி,

இன்றைய பொழுது எப்படியோ
என்று

தண்ணீர் தேடி கொப்பளித்து
விட்டு...

பின்னேழுந்து, கிளம்பி, கீழே கீழிறங்கினால்
பிறந்தநாள் என்று

வாயில் இனிப்பை திணிக்கிறாய் நீ...

Tuesday, November 23, 2010

சென்ற வார உலகம்.

சென்ற வாரம் ஒளியின் வீர வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மங்களூரு சென்று மீண்டும் சென்னைப் பயணம். மோட்டார் சைக்கிளில்.
இரண்டு நாட்களில்.

காலையில் வங்கக் கடலில் கண்டு புறப்பட்டு, அரபிக் கடலில் அஸ்தமனம் பார்ப்பதாக சூளுரைத்து கிளம்பினோம். கிளம்பினோம்.. சென்று திரும்ப இடையில் 1711 கிலோ மீட்டர்கள்.

பயணக் கட்டுரையல்ல இது. இந்த பயணம்-இப்படி ஒரு பயணம் தேவையா? என்பது பலரின் கேள்வியை இருந்தது. பெங்களூரில் நண்பர்களை பார்த்தாயா? மங்களூரில் இந்த இடம், அந்த இடம் எல்லாம் பார்த்தாயா? என்ற கேள்விகளுக்கு, நேரமே இல்லை, முதல் நாள் காலை நான்கு மணிக்கு கெளம்பி, மறுநாள் காலை நான்கு மணிக்கு மங்களூர் அடைந்து, அங்கிருந்து மீண்டும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டு விட்டோம் என்று பதில் அளிக்கையில், ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்டது போலவும், செழிப்பான மனோ நிலை இல்லாதவரிடம் பெசுவட்து போலவும் அவர்கள் பேசியது நகைக்க வைத்தது.

உண்மை. எதற்காக உடலையும், மனதையும் இப்படி வருத்திக்கொண்டு ஒரு பயணம்? முடி பட ஆயிரம் வேலைகள் இங்கிருக்கையில், இது என்ன?
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் பிடி பட வில்லை. ஒரு அரை கூவல். அதற்கு எங்கள் பதில் - இந்த பயணம்.

புதிய மனிதர்களை சந்திக்க ஓர் வாய்ப்பு. உடலும் மனமும் எவ்வளவு தாங்கும் எனக் வளைத்துப் பார்க்கும் ஆசை. இந்த வயதில் செய்யாவிடில் பின்னெப்போது, எனும் எண்ணம்.

இந்த பயணத்தின் பலன்கள், எந்த புறநானூற்று வீரனையும் வலியும் பொறாமையும் கொள்ள செய்யும் இரு விழுப் புண்கள். பல அனுபவங்கள். சில நண்பர்கள். எச்சரிக்கை. முதிர்ச்சி.

கோபிகா திருமணம். நானும் தவுலத்தும் இனைந்து பங்கேற்கும்.. இரண்டாவது திருமணம் என்று நினைக்கிறேன். முதல்- ஹாஜிராவின் உடையது - இரண்டரை ஆண்டுகளுக்கு முன்.

செங்கல்பட்டில் கோபிகா மணமக்களை வாழ்த்திவிட்டு, அப்படியே ஒரே மூச்சாக, திருவான்மியூரில் மஞ்சுநாதன் திருமண விழாவிலும் கலந்து சாதனை படைத்தேன். :-) ஒரே வீச்சில் மங்களூரு சென்று திரும்பியதை விடவும் இது எனக்கு அதிக மகிழ்ச்சி.

காலில் கட்டு. ப்றேயானத்தின் பொது ஏற்பட்ட விழுப்புண் தானை மாறும், ஆறும் என்ற ஒரு வார காத்திருப்புக்கு பின், கடைசியாய் அப்பாவிடம் காட்டிவிட்டேன். 5 மாத்திரைகள், முழு ஓய்வு, காலில் 'crepe bandage' எனப்படும் சுளுக்கு கட்டு ஒரு வாரத்திற்கு என்று அவர் தன் 'மருத்துவ' குணத்தை காட்டி விட்டார். :-(

இதற்குத்தான் நான் மருத்துவர்களை அன்டுவதுமில்லை , அன்ட விடுவதுமில்லை .

ஆனால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். போய்க்கொண்டே இருக்கும். இன்று இரவு இப்பதிவை தொடர்கிறேன்.. அதுவரை... விடை கொடு நண்ப.

Saturday, November 06, 2010

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். ஒரு பட்டாசு கூட கொளுத்தாத சோம்பேறி தீபாவளி இன்று எனக்கு. வீட்டை விட்டு இந்நொடி வரை வெளியே கால் பதிக்க வில்லை. பதிவு எழுத வேண்டும் என்று மதியம் மழைச்சாரல் முதல், மாலை மஞ்சள் பூக்கள் வரை என்னை உந்தித் தள்ளி கடைசியில் இதோ...

என்ன செய்து கொண்டிருந்தேன் இந்த இரு வாரங்கள்... சச்சினுக்கு கல்யாணம்.. மூன்று நாள் விழாவில் இரண்டு நாட்கள் அடியேன் பிரசன்னம் . அதிகாலை ஆறு மணி முகூர்த்தம்... ஐந்து மணிக்கு எழுந்தும் ஏழு மணிக்கு முன் செல்ல முடியவில்லை. ரிஷிக்கு வேஷ்டி எடுத்து சென்றது மட்டுமில்லாமல், அதை அவன் இடுப்பில் நிற்கவும் வைக்க நான் பட்ட பாடு.... அய்யய்யோ.... (அவ்வளவு கடினமாக இல்லை.. சும்மா ஒரு காமடி-க்கு )

வழக்கம் போல் நாங்கள் இருவர் தான் கடைசி... :-) ஆனாலும் அந்த கடைசியில் நாங்க தான் heroes!!!!

late-ஆக போனதோடு, நண்பர்கள் எல்லோரும் வழக்கம் போல கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு அய்யரை பற்றி அடித்த comment-கள் இன்னுமும் 12 B touch விட்டு போகலை என்பதை தெளிவாக காட்டின.. சச்சினுக்கும் , அவன் காதலிக்கும் மனைவிக்கும் , நாங்கள் அணிந்து சென்ற மைனர் cooling glass-களை மாட்டி விட்டு, போட்டோ போஸ்... என்று மேடையிலயும் comedy தொடர்ந்தது .. இறுதியில் buffet-யில் bearer-களை கலாய்த்து, parking-இல் driver-களோடு இனிதே நிறைவு பெற்றது..

சென்ற ஞாயிறு indi blogger வலைப்பூ திரட்டி நடத்திய madras magic என்ற வலைப்பதிவுகளை மேடை நாடகங்களாக இயற்றும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.. சிவகாமி பெத்தாச்சி அரங்கம்..

பகுதிகள் நன்றாக இருந்தன, ஜூடி எனும் பெண் பதிவரின் கனவுக் காதலன், மற்றும் பெண் பார்க்கும் படலங்களை கிண்டல் செய்யும் நாடகம் மிகவும் பிடித்திருந்தது...

மற்ற இரு படைப்புகளும், பகுதிகள் பரவாயில்லை... நிறைவாயில்லை... ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரை வழிக்காத பல துணுக்குகளுக்கு, எங்கள் முன் வரிசை இளம் பெண்கள் விழுந்து விழுந்து , உருண்டு பிரண்டு சிரித்தது, ஒரு வேலை கல்யாணம் பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று கவலை கொள்ள வைத்தது நிஜம்...

பிறகு... வெங்கடாசலம் திருமணம்.. கடைசி நொடியில் நண்பன் மஞ்சுநாதன் அழைத்து நினைவூட்ட வில்லை என்றால் :-( ??? 9 மணிக்கு ஓடினேன்... ஆனாலும் ஒரு மகிழ்ச்சி.. நண்பர் திருமண விழ attendance 90 % மேல் சீராக வைத்துக் கொண்டிருக்கிறேன்... பெருமை.


வேறென்ன...

Saturday, October 23, 2010

அதிகாலைத் தேநீர் திட்டம்...

கிழக்கு கடற்கரையில்,
உதிக்கும் சூரியனோடு ஒரு தேநீர்,

வெள்ளிக் கடல்
கால் வருட, கையோடு கை -

என்றெல்லாம் பெரும் திட்டத்தோடு
தொடங்குகிறது நமது நாளைய பொழுது,

மடக்கி, நீட்டி, பிரண்டு ,
ஆடை தேடி, காலணி கிடைக்காமல்...

விடிந்துவிட்டதே! போவதா,
தேவையா, என்று நினைத்து முடிக்குமுன்,

அழைக்கிறது அலைபேசி , உறக்கம்
கலையா உன் குரல் தயக்கம் கலைக்கிறது,

என் பால்கனியில், ஒரு காபியோடும்,
உன் படுக்கையில், சிறு போர்வைக்குள்ளும்,

வழக்கம்போல், இன்றும்
சுபமாக முடிகிறது நம் பெரும் திட்டம்...

Thursday, July 15, 2010

?

வாம்மா துரையம்மா... இது வங்கக் கரையம்மா....

சில நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல்... மதராசப்பட்டினம் படம் பார்த்தேன்... நல்ல படம். சில இடங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தன... பல இடங்களில் இயக்குனர் அந்தக் கால மக்களை சித்தரிப்பதில் உரிமை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியோடு திரையரங்கை விலகினேன்...

கொச்சின் ஹனிபா என்ற ஒரு நல்ல நடிகனின் கடைசிப் படம்.. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்...

இந்த பதிவு அந்த படத்தை பற்றியதோ, இல்லை எனக்குப் பிடித்த கொச்சின் ஹனிபா பற்றியதோ இல்லை.. அவரைப் பற்றி வேறொரு நாள் எழுத முயல்வேன்...

இந்த பதிவு, படம் முடிந்து இதோ என் அறையில் பாடல் முணுமுணுத்த படி யோசிக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமையைப் பற்றி.. நம் வாழ்வின் பதிவுகள் நாளை எப்படி எங்கே இருக்கும் என்பதைப் பற்றி...

ஐம்பது வருடங்கள் கழிந்தால் ஒளி யாருடைய நினைவில் இருப்பான், யாருடைய நினைவிலும் இருப்பானா என்பதை பற்றி...

இன்றிருக்கும் என் நண்பர்கள், அன்று எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி... வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை ஒளித்து வைத்துள்ளது என்பதைப் பற்றி..

எல்லோருமே பிறந்து விட்டோம்... மூச்சு, இதயம் அனிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன... பசி, தூக்கம், காமம், எந்த வித அழைப்புமின்றி அறிவிப்புமின்றி தோன்றி- அது தீர்ந்து - மறைந்து கொண்டிருக்கின்றன... அவைகளின் பக்க விளைவுகளை சமாளித்துக் கொண்டு நடமாடி...

ஒருநாள் இவை அனைத்தும் நின்றுவிடும். அவற்றின் நிழல்கள் நீடிக்கும்.. காமத்தின் நிழல் பிள்ளைகளாய். பசியின் நிழல் விட்டுச்சென்ற தொழிலாய் . அயர்வின் நிழல் செர்த்துச்சென்ற சுகமாய்.

ஆனால் நாம் ? உங்கள் தாத்தாவின் பெயர் தெரியுமா? அவர் தொழில்? அவரது தந்தையின் பெயர்? தொழில்? அவரது பூர்விகம்? தெவை இல்லை, இல்லையா? அல்லது அவசியம் இல்லை.

அவர் சமாதி மண்ணோடு மக்கி விட்டது. அவர் நினைவு மங்கி விட்டது. அவரது கடைசி நிழல்படமும் கரையான் இரைப்பையில். இனி அவர் இல்லை. உங்கள் மகனுக்கு அவர் இல்லை. உங்கள் பேரனுக்கு உங்கள் தகப்பன் இல்லை.

அவர்கள் வாழ்வின் நீளம் 3 தலைமுறை. நீங்களும் மறக்கப் படுவீர்கள். உங்கள் பதிவுகள் திறக்கப் படாமல் போகும். நம் பெயர்கள் உச்ச்சரிக்கபடுவது ஒரு நாள் முற்றும் முற்றும். உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் உங்களின் சுவடரியாமல் போவார்கள்.

ஏன்? பசி. தூக்கம். காமம். இவற்றின் எச்சங்களை மட்டும் விட்டுச் சென்றால், நம் வாழ்வின் நீளமும் இதுதான். குறைய வாய்ப்புண்டு. நிச்சயமாய்.

அறிவு, உணர்வு, பரிவு. இவற்றை விதைத்து பாருங்கள். நீளும். வாழ்ந்தோம், மறைந்தோம், கரைந்தோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மூழ்கி மூச்சு முட்டி , இறக்கப்போகிறோம், மறக்கப் போகிறார்கள் என்று அறிந்து மரணம் சேர்வதில் உடன்பாடில்லை.

நான் நினைக்கப் பட வேண்டியவன். அதை நோக்கி நடக்கப் பழக வேண்டியவன்.

Saturday, July 03, 2010

உலகம்.

--



இரவுகள் நீண்டு , விடியல்கள் தீர்ந்து , நீரெலாம் உறைந்து,
உயிரெல்லாம் ஓய்ந்து, கடவுள்கள் சாய்ந்துபோன உலகம் .

கோடியாண்டுகளில் யாருமே கேட்டிராத அமைதி.
கரிய வானம். ஜொலிக்கும் நட்சத்திரங்கள் .

இவற்றை வர்ணிக்கக் கூட எவரும் இல்லை.

கரப்பான் பூச்சிகள்கூட தீர்ந்து விட்டன.

அகழ்வுகள் கூறும் கதை கேட்கவும் யாருமில்லை.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் ,
உலகில் மானுடம் பார்த்த, கேட்ட, உணர்ந்த ஒட்டு மொத்த அறிவும் கோடிக்கணக்கான நூல்களாய், தகடுகளாய், பேழைகளாய் படிக்க எவருமற்று கிடக்கின்றன.

இனியும் என்றும் எவரும் பயனுற போவதில்லை.

பணம் , வைரம், தங்கம், காணி, கடவுள், இன்னும் மனிதன்
துரத்தியவை, துடித்தவை, படைத்தவை எல்லாம் அர்த்தமற்றவையாய் கிடக்கின்றன .

காற்று, இல்லை. அசைவு, இல்லை. காலம், இல்லை. மாற்றம், இல்லை.

விழிப்பில் அம்மாவைக் தேடி ஓடினேன்.

Monday, June 14, 2010

குட்டிக் கவிதைகள்

என் முத்தம் மட்டும்
முடிகையில்தான்
இதழ்கள் இணைகின்றன...

--

வானம், கையெட்டும் தூரம்தான்.
என் ஜன்னல்
கம்பிகள்தான் தடுக்கின்றன..

--

ஓடி விளையாடு பாப்பா-
என்று மாலை முழுதும்
மனப்பாடம் செய்தான்.

--

புத்தத்தில் கூட
ஆசைக்கு இடம் உண்டு.
ஆசைகள் துறக்க.

--

பி. கு. வழக்கம் போல் எப்பொழுதோ எங்கெங்கோ தோன்ற தோன்ற கிறுக்கிவைத்திருந்த கவிதைகள். என் பொன் குஞ்சுகள்.