Friday, January 16, 2009

கவிதை

உனக்காக காத்திருக்கும் பொழுதுதான் 
உனக்கான கவிதைகள் கிடைத்தன,
அதனால்தான் நீ வரமாட்டாய்
என்று தெரிந்தும்... இன்னும்
காத்திருக்கிறேன்!

P.s: If this poem feels familiar, you must have seen it in my
client notepad, where it has been for almost two yrs now... :-)

Friday, January 02, 2009

Diary 2008..



Pictures speak a thousand words.... Some pictures from last year.... a gallery of events that happened in my life last year...



31,Dec 2007, Party at GN club.
Ara&Mrs.Ara ,Myself,KN,Sara,Mahadeer,
Harishankar-Had a nice time dancin..


Hajira's Wedding.
Man, this yr was a yr of weddings!

B'lore trip No. 1. Had a nice time.


March, B'lore trip 2. :-)


April, Trivandrum-Engagement trip


Munnar travel... extension of
Trivandrum trip!



June , Cochin- Wedding- :-)


Akka's B'day!
Happy B'day ka!


Amma!



Fareed,Durai and Sandeep-
Training is on at Office!



October-Marina Cafe shoot!


QueensLand day! Wonderful!


Maha! Kuda Hafeez!


Nov 16, Lakshmi's wedding!
Cochin Nostalgia!


The Chisel event - success story!!


Kamila's Bday!


Dec 03, Amirtha's 5th and Aatha's 75th B'day!


Ayish trip.


Many events happened this yr which weren't recorded on cam, but only in my memories...
Shamu, Nawaz,Ch got married, the Nw yrs party of 2009.. etc... are not here.. few others absent because of my lack of patience to upload the pics..

Also, 2008 saw the loss of two of my greatest ICONS- Sujatha and Michael Crichton... and also many ups n down in Business.. I just hope to correct my mistakes and keep my fingers crossed.. cya soon!

Wednesday, December 24, 2008

Do you see a pattern?




Dream girls from my school days to now (in order of appearance)... Is there a pattern? cos am trying to figure out what kinda beauty attracts me... ;-) :-)

Tuesday, December 23, 2008

crap happens man...

Dear you,

What do you do when you know you have stepped into shit?

Well.. different people do different things.. what do you do? Some people don't even notice it and they keep walking.. they can smell it, but they are always sure its de other guy and ofcourse curse..

Some people notice and they quietly find a nice carpet to wipe it off and walk away like nothing ever happened...

Some others, are so disgusted that they have to get back home and have to wash it all out and probably have a bath and 2 bottles of deo before they can step out again..

There is this special kind of people, these people... when they step into shit, they start kicking it all around... on everyone and everything around.. if they smell, they wann de world to smell wid dem...

So,what do you do usually?what do you do when you know you have stepped into shit? Nice carpet? Keep walking? U never step into shit?.. oh you're not a fool? (;-p) , Run back home? , or...

think about what you wanna do... you will be a better guy... hey, am not shittin u!

Monday, September 22, 2008

I laugh when I think it is not death that is parting us... it is life...


---------------------------------------------------------------------------------





You know... It's been what... like forever since I updated the blog... MyHeartMyMind.. what crap... Does it mean nothing's going on in my heart n my mind?

Well, there are there times when someone leaves your life.. n there are the times just before that happens.. times when you know that, that someone is going to move out of your life soon.. but its final... unavoidable... so.. what do you do? what can you do? you prepare to wave good bye...

The season has come.. the winds are on.. the sails are set... There is the mammoth ship... there are loud horns.. you see people hurrying towards it... It is gonna raise the anchor and start to move away slowly... away ... away... away...

Until You can see it no more... You stand there... unable to move... unable to stop wishing it to come back... unable to accept it has left... Half the pain is the ship that left... half are the thoughts about the one's that would leave... in the future... time and again... each time taking away a part of you.. making you more and more incomplete... leaving you changed forever...

Why do you have to love so much and be hurt... Why does a friend have to make you cry when you're happy and when you're sad... why do they have to come... and then, why do they have to leave you and go?

I laugh when I think it is not death that is parting us... it is life...

farewell.... I am sorry if I hurt you ever... I Love you... Bye K...




Wednesday, August 06, 2008

Sunday, May 25, 2008

Pictures!

The Ambani family

This picture was taken on the eve of Malar's wedding in 2003... Amudhan, Me and Raja boi(Left to right). None of us look like that anymore... But I love this picture!


The Big A!



Ahem....



P.S. These are just four random pictures I like... If you see any similarities... well... U wld be right in 10-20 years...!

Love...

Just when I thought the world was safe,
I Found Love.
Just when I thought that Hell Was a place,
I Felt Love.
Just when I thought Death was but once,
I Lost Love.
Just when the thoughts wouldnt go away,
I sing Love.

-A poem I apparently wrote when I was a teenager...I stumbled upon it when I was backing up files from my old, home PC.... It was damn funny when i read it now... :-) Got me nostalgic though... 'Love'... hahaha.. :-p .. my god!!

P.S. The coloring is intentional.. ;-)

Saturday, May 03, 2008

பயணப் பக்கங்கள்...

அமெரிக்காவில் தனிமையில் அலைந்து திரிந்த நாட்களில் ,Detroit நகரில் ஒரு தெரு ஓர உணவு விடுதியில் அமர்ந்து எழுதி முடிக்காமல் விட்ட பக்கங்களை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் முடித்து கீழே நிரப்பி இருக்கிறேன்... நாம் எழுதி என்றோ தொலைத்து விட்ட பக்கங்களை மீண்டும் படிப்பதில் இரண்டு விஷயங்கள் எனக்கு பிடிக்கும்.. ஒன்று, மீண்டும் மலரும் நினைவுகள்.. இரண்டு, நம் எழுத்துக்களை அந்த இடைவெளி முதிர்ச்சியோடு படிக்கையில் நம் எழுத்துகளை(நம்மை ) நாமே எடை பார்க்க ஒரு வாய்ப்பு... எப்பொழுதும் நகைப்புக்கும் , எப்பொழுதாவது நிறைவிற்கும் என்னிடமே நான் ஆளாவேன்..

இப்பொழுது..

இந்த அமெரிக்கப் பயணம் என்னை மாற்றி விடவில்லை,
என் பார்வையைமாற்றி இருக்கிறது .

எல்லை தாண்டி விட்டால் , எல்லைகள் மாறி விடுகின்றன.
மனம், திருமணம், காதல், கல்வி, கடவுள் , எல்லாம் மாறி விடுகின்றன.

அங்கே பூசி மெழுகப் பட்டவை இங்கே பிரித்து மேயப் படுகின்றன.
அங்கே தூரத்தில் மறைக்கப் பட்டவை, இங்கே துரத்தி படிக்கப் படுகின்றன.

ஆனாலும், சொந்தம், பாசம், விழா, எல்லாவற்றிக்கும் இந்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.

நண்பர்கள் தான் இங்கே சொந்தங்கள். மணமோ, மரணமோ, கூடி நிற்பது நட்புதான்.

சொந்தம் என்பது பெயருக்குத்தான். அட, உண்மையிலேயே 'பெயருக்குத்தான்' !

"இந்தியாவின் கலாச்சாரம் பற்றி படித்திருக்கிறேன்!"
"நான் ஒரு முறையாவது இந்திய மண்ணை மிதிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் !"
" காந்தியை நான் மதிக்கிறேன், அவர் எத்தனை உயர்வான மனிதர்!"
"நான் யோகா கற்கிறேன் !"
"நமஸ்தே!!! :-) "

நான் சென்ற இடங்களில் எல்லாம் அமெரிக்கர்கள் மறக்காமல் கூறியது இவை தான்.

முன்பு வந்த பொழுது இவ்வளவு கூட்டமில்லை. இந்த முறை தெருவில் நடக்கும் பொழுது ஒரு இந்தியரையாவது உரசாமல் போய்ச்சேர முடியாது என்னுமளவுக்கு இந்திய அம்பிகளும், நங்கைகளும் பார்க்க முடிகிறது.

கோவில்களும், தெய்வங்களும் எதற்காக உருவாகி இருக்கலாம் என்பது நிச்சியமாக இங்கே தெரிகிறது . Detroit நகரில் ஒரு தமிழ் தம்பியை கண்டுபிடிக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை Detroit பராசக்தி கோவிலில் காத்திருந்தால் போதும். அதேதான் எந்த ஒரு இந்திய வம்ச ஆசாமியை கண்டு பிடிக்கவும் . அவரவர் கோவிலில் கட்டாயம் ஆஜராகி விடுகிறார்கள்.

எல்லாப் பிள்ளைகளும் பரதநாட்டியம் கற்கின்றன, எல்லாப் பயல்களும் வயலின் , மிருதங்கம் ஏதாவது.

இந்தியாவில் கலைகள் தெருப் பிள்ளைகள் போல இளைத்து கிடந்தாலும், இங்கே பரவாயில்லை 'Whole Milk' குடிக்கும் புஷ்டியான அமெரிக்கப் பாப்பாவாக நன்றாகவே இருக்கின்றன.

வருடத்திற்கு பத்து கச்சேரி , ஆறு அரங்கேற்றம் என்று வித்வான்கள் வறுமை இல்லாமல் தங்கள் டாக்டர், engineer வேலைகளையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் அமெரிக்கர்கள் பற்றி தொடங்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு எப்படியோ இந்த கட்டுரை மாறி விட்டது.

இங்கு அலுவலகத்தில் 'SIR' கிடையாது. பள்ளிகளிளும்தான். 'Chris', 'Mr.Brandon','Ms.Shelly' என்றாலே போதும். 'SIR' எனும் வார்த்தை கோபத்தில் ஒருவரை கூப்பிடவும், காவல்துறையினை அடைமொழிக்கவும்தான்.

நமது மரியாதைக்குரிய 'SIR' இங்கே கோபம் காட்ட மட்டுமே உபயோகம்.

உயர் அதிகாரியை பார்த்தால் எழுந்து மரியாதை செய்யத் தேவை இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் தான் ஆசிரியர் இருக்கும் அறைக்கு சென்று படிக்க வேண்டும். நம் ஊரைப்போல் ஆசிரியர் சென்று மாணவனை தேட வேண்டிய நிலை இல்லை.

இடது இங்கே வலது. வலம், இடம். எல்லாம் கடந்து இங்கே எனக்கு பிடித்தது ஒன்றே ஒன்று தான். 3 மணி நேரமாய் இந்த உணவகத்தில் எதுவுமே order செய்யாமல் உட்கார்ந்து இருந்தும் , புன்னகையுடன் எனக்கு தண்ணீர் வைத்து விட்டு அவர்கள் வேலையை பார்த்து கொண்டு இருக்கும் மனிதனை மனிதன், ஒரு மனிதனின் தனிமையை மனிதன், ஒரு மனிந்தனின் சுதந்திரத்தை மனிதன் மதிக்கும் பண்புதான்.

என் உடை பற்றி, என் நடை பற்றி, என் உடல் பற்றி யாருமே இங்கு கவலை கொண்டவர்கள் இல்லை. நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் கவலை கொள்ளவில்லை. இதுதான் எனக்கு மிகவும் ஆனந்தம் தருவதாய் அமைகிறது. இந்தியாவிலும் மக்கள் இது போல அடுத்தவர் அந்தரங்கத்தில் கவலை கொள்ளாது தம் வேலைகளை பார்த்தாலே பாதி சிக்கல்கள் இல்லை. ஹ்ம்ம்..

இந்தச் சூழலில் மணிக் கணக்காய் எழுதிக்கொண்டே இருக்கலாம்.... ஆனால் எனக்கு பக்கத்து மேசையில் உள்ள இளம் அமெரிக்க ஜோடி ஏதோ ஊடலில் மூழ்கி உள்ளார்கள்.. அது என்னவாய் இருக்கும்? இருங்கள், சற்று நேரம் உற்று கேட்டு விட்டு வந்து தொடர்கிறேன்.. ;-)

Friday, March 28, 2008

உண்மைகள்....

மரணம்...

மதத்தால்,
மருந்தால்,
பணத்தால்,
தவத்தால்,
மதியால்,
விதியால்,
கடவுளால்
கூட மீற முடியாத
சத்தியம்...


மறதி...

காதல்,
அன்பு,
பாசம்,
நன்றி,
கோபம்,
குற்றம்,
துக்கம்,
தோல்வி,
மரணம்,
எல்லாம்
மீளும்
வரம்...